Friday, April 7, 2017

An Advanced Sluice Knob mechanism, 1100 years ago, as inscriptions @ NodiyurMaruthan Lake, reveals.




1100 years old stone inscription has been discovered at Gandarvakottai, Pudukottai District,  by The President of  Pudukottai Archaeological  Research  Forum Mr. Rajendran, Founder ManganurMr.Manikanadan& Team consists K.Somasundaram, Teacher, Students of Gandarvakottai Boys Higher Secondary School Mr.Balamurugan, Mr.Suthivarman, Mr.Harharasudan, Saravanana, Local Guide Mr.Chellaiah and Mr.Nagarajan.


As Mr. Manikanadan explained



This Village called NodiyurPattinam in those days was under the division of ‘KeezhSengilinadu’. Until 17th Century it was flourishing as the local Sivan Temple inscriptions detailing about Water Irrigation Details, Tax Collection and maintenance of ThirugnanaSammandarMath .
And Stones for constructing Udaiyar Temple near Tanjore had been taken from here, Killiyur Hill of  NodiyurPattinamin AD 1196, as King Kulothunga III inscrioption explains.










The discovered inscription says 10th Year of King Rajakesari Aditya, a person called Mangalanalloor Vilakkan Eran Ranasinga Mutharaiyan of  KeezhSengilinadu, installed this irrigation knob, Sluice Valve (Kumizhi) to control the Maruthan Lake Water flow .
Actual inscription in tamil 





shasvaththi sree govi raajakesari panmarkkuyaandu (paththaa)vathu keezhsenkili naattu mangala nalloor vilakka aeran iranasinga muththiraiyan saeviththa kumizhi”

By the style of inscription and details, this 1100 years old, as experts clarified.
 This Maruthan Lake was setup after clearing the forests as it comes under Marutham Land ( Cultivation Fields).
In those days there are many types of Sluice Gates. But this kind of knob can control the water flow precisely.
As Tamilnadu got less amount of rain fall, our ancestors knew the value of water and its storage. So they created  more lakhs and tanks.

After Thiruppurambiyam war, NirupathungaPallava with son Abarajithan fought VaragunaPandian with the help of Adiya I  Son of VaijayalayaChola  and won the battle. After that Adiya I expanded his dynasty until Chengalpattu. And had Mutharaiyars under his ruling, used them well in management. So this RanasingaMutharaiyan was under Adiya I, created this sluice.
Who is this RanasingaMutharaiyan?
As  per Chetty Thirukkonam Temple inscription in Udaiyarpalayam taluk, Perambalur District. It mentions the name of the God as Ranasinga Eswaran. So as pallava use this ‘Singa’ surname, this mutharaiyar too might have used as RanasingaMutharaiyan. Eran means Farmer using plough.

So this inscription explains the relation between chola&Mutharaiyar and Mutharaiyar’s connection with Sri Lanka with this Ranasinga Name and talks about the finer methods of  water managements.

Wednesday, April 5, 2017

1100 ஆண்டுகளுக்கு முன்பே விவசாயம் செழிக்க குமிழி அமைத்துக்கொடுத்த தமிழன் – நொடியூர் மருதன் ஏரியில் கல்வெட்டு கண்டுபிடிப்பு




புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகேயுள்ள நொடியூர் கிராமத்தில் 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்வெட்டு புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழகத்தலைவர் ராஜேந்திரன்,  நிறுவனர் மணிகண்டன் ஆகியோர் தலைமையிலான குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் பள்ளி ஆசிரியர் ஆசிரியர் கு.சோமசுந்தரம் , கந்தர்வகோட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பாலமுருகன்,சுதிவர்மன்,ஹரிகர சுதன்,சரவணன் உள்ளூர் வழிகாட்டிகளாக செல்லையா,  நாகராஜன் ஆகியோரும் பங்கேற்றனர்.

இந்த கல்வெட்டு குறித்து தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் மங்கனூர் ஆ.மணிகண்டன் கூறியதாவது

கீழ் செங்கிளி நாடும் வளமும்
நொடியூர் பட்டிணம் என்றழைக்கப்பட்ட இவ்வூர் கீழ் செங்கிளி நாடு என்ற துணை நிர்வாக மண்டலமாக  17 ஆம் நூற்றாண்டு வரை செழிப்போடு விளங்கியுள்ளதை நொடியூரில் உள்ள சிவன் கோவில் கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. அக்கல்வெட்டுகளில் நீர் பாசனம், கோயில் பராமரிப்புக்காக வரி செலுத்துதல்,சுங்க வரி வசூலித்தல், இங்கு அமைந்திருந்த திருஞான சம்பந்தர் மட பராமரிப்பு  உள்ளிட்ட தகவல்கள் கிடைக்கின்றன.
 அது மட்டுமின்றி தஞ்சைக்கு அருகேயுள்ள உடையார் கோயில் சிவாலயத்திற்கு மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் (18ஆம் ஆட்சியாண்டு, கி.பி.1196) கல் எங்கிருந்து கொணரப்பெற்றது என்பதனை, நொடியூர் பட்டணத்து கிள்ளியூர் மலையிலிருந்தும் சிலை கொண்டு வந்து... என்ற கல்வெட்டுக்குறிப்பின் மூலம் சோழர் ஆட்சிக்காலத்தில் இந்த ஆட்சிப்பகுதி மிக முக்கிய பகுதியாக விளங்கியதை அறியலாம்

புதிய கல்வெட்டுச்செய்தியும்  ஆண்டும் 
“ஷஸ்வத்தி ஸ்ரீ கோவி ராஜகேசரி பன்மர்க்குயாண்டு (பத்தா)வது கீழ்செங்கிளி நாட்டு மங்கலத்து. விலக்க ஏரன் இரணசிங்க முத்தரையன் சேவித்த குமிழி “
கோவி ராஜகேசரி என்றழைக்கப்பட்ட ஆதித்தனின் பத்தாவது ஆட்சியாண்டில் கீழ்செங்கிளி நாட்டை சேர்ந்த மங்கலத்து விலக்க ஏரன் இரண சிங்க முத்தரையன் என்பவர் இந்த குமிழியை அமைத்து கொடுத்ததாக இக்கல்வெட்டில் தகவல் பொறிக்கப்பட்டுள்ளது.

 இக்கல்வெட்டின் எழுத்தமைதி மற்றும் ஆவணப்படுத்தப்பட்ட ஆதித்த சோழரின் கல்வெட்டு களோடு ஒப்புநோக்கும் போது  இது 1100 ஆண்டுகள் பழமையானது என்பதை அறிய முடிகிறது .

நொடியூர் மருதனேரி பெயரும் நிலவகைப்பாட்டு  தொடர்பும்
கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்ட மருதனேரியானது சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன்பு காடுகளை அழித்து உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதால்தான் மருதநிலம் என்கிற வகைப்பாட்டில் வயலும் வயலைச்சேர்ந்த இடமாகவும் அமைந்துள்ளது. என்பதால் இது முழுக்க பாசனத்திற்கான ஏரியாக அப்போதே வகைபிரித்து நிர்வகிக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிய முடிகிறது

குமிழி அமைத்தலும்  ஏரியும் :

ஏரிகளில் இருந்து பாசனத்துக்கு நீரை வெளியேற்ற அன்றே சிறந்த முறையில் மதகுகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. மதகுகளுக்கு பல பெயர்கள் இடப்பட்டிருந்தன. சுருங்கை, புதவு, மதகு, குமிழி, தூம்பு, புலிக்கண்மடை, மடை முதலியன அப்பெயர்கள். தற்காலத் திருகு அடைப்பான் போன்று நீர் வெளியேரும் அளவை சிறுகச் சிறுக குறைக்கவோ அதிகரிக்கவோ கூடிய குமிழிகளும்  அன்றே இருந்தன.
தமிழகத்தின் பல பகுதிகள் வடகிழக்குப் பருவக்காற்றால் வருடத்திற்கு இரண்டு மாதங்கள் மட்டுமே மழை பெறுகின்றன. அதனைக் கொண்டுதான் வருடம் முழுவதற்குமான நீர்த்தேவையைச் சமாளித்துக் கொள்ளவேண்டும் என்பதை  நன்கு உணர்ந்து கொண்ட பழந்தமிழர்கள் ஆயிரக்கணக்கான ஏரி/குளங்களை உருவாக்கி, அந்த இரண்டு மாத மழை நீரையும் முழுமையாகச் சேகரித்துப் பயன்படுத்திக் கொண்டனர். அவற்றிற்கு சான்றாக இருப்பத்துதான் இந்த மருதன் ஏரிக்குமிழியாகும்.

ராஜகேசரி ஆதித்தனும் இரணசிங்க முத்தரையனும்

ஸ்ரீ கோவி ராஜகேசரி என்று தம்மை அடையாளப்படுத்திக்கொண்டவர்களான ஆதித்தன் , கண்டராதித்தன் , இராஜராஜன் ஆகியோரில் ஆதித்தன் பல்லவர் களான நிருபத்துங்கன் , மகன்  அபராசிதன் , பாட்டன் பிருதிவீபதி யுடன் போர் உறவுகொண்டு  பாண்டியன் இரண்டாம் வரகுணன் என்பானை திருப்புறம்பியம்(கும்பகோணம் அருகே) எனுமிடத்தில் தோற்கடித்ததாக சான்றுகள் பகிரப்படும் நிலையில்,  இப்போரில் பிருதிவீபதி இறந்த போதும் பல்லவர்களுக்கு வெற்றிகிடைக்க ஆதித்தன் காரணமாக அமைந்தான். இதன் பின்னர் கி.பி.882 ல் நிருபதுங்கன் இறந்தவுடன் ஆதித்தன் செங்கற்பட்டு வரை தனது எல்லையை  விரிவாக்கம்  செய்ததோடு அதே காலக்கட்டத்தில் பல்லவர்களின் நேரடி துணை ஆட்சியாளர்களான  முத்தரையர்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டு அவர்களை தமது நிர்வாக மேம்பாட்டுக்கு பயன்படுத்திக்கொண்டதை இரண சிங்க முத்தரையன் இந்த ஏரியை உருவாக்கி குமிழி அமைத்திருக்கும் இக்கல்வெட்டு   முத்தரையர் மற்றும் ஆதித்தனிடையே இருந்த உறவுக்கு வரலாற்று சான்றாக அமைகிறது.

ஏரன் விலக்கன் இரணசிங்க முத்தரையன் யார்?

பெரம்பலூர் மாவட்டம்,உடையார் பாளையம் வட்டம்,செட்டித் திருக்கோணம் இரணேஸ்வரர் கோயிலின் கருவறை
முதலாம் குலோத்துங்கன் கல்வெட்டில்
கங்கை நாடாழ்வாந் சேதநன் பட...கக்கு வைசத பகை திருந்த வேண்டுமென்று எல்லாரு சொல்ல சம்மதித்து திருக்குற்றத்து மாதேவர் “இரணசிங்க ஈஸ்வரமுடையாருக்கு” விளக்கு முப்பத்திரண்டும் சீராளந் துறந்த என்று செய்தி பகிரப்படுவதன் மூலம் இப்பெயர் கொண்ட ஆட்சியாளர் ஒருவர் இருந்திருப்பதும் அவரது இயற்பெயரான இரணசிங்கன் என்ற அடைமொழியுடன்  இறைவன் அழைக்கப்பட்டிருப்பதையும் அறிய முடிகிறது.
பல்லவர்களில் புகழ் பெற்றவர்கள் சிங்க என்ற பெயர்ச்சொல்லுடன் பெயர் சூட்டிக்கொள்வதை அறிகிறோம் அதன் வழியில் இரண சிங்க முத்தரையன் என்று பெயர் வைத்திருப்பார்களோ என யூகிக்க வேண்டியுள்ளது .  இப்பெயருடன்   ஏரன் விலக்கன் என்கிற அடைமொழியோடு அழைத்துக்கொண்டதன் மூலம்  அவன் தன்னை ஒரு உழவன் என்பதில் பெருமை கொண்டு உழுபணிக்கு உதவியாக இருக்கும் ஏர் என்கிற கருவியின் பெயர்ச்சொல்லை அடிப்படையாகக்கொண்டு அப்பணியை செய்கிறவன் , அதன் தலைவன் என்கிற வகையில் தம்மை ஏரன் என்று அழைத்திருக்க வேண்டும் என்று கருதலாம். விலக்கன் என்பதற்கு சரியான பொருள் என்னவாக இருக்கும் என்பதை தொடர் ஆய்வின் மூலம் அறிந்து கொள்ள முடியும். அது மட்டுமின்றி இலங்கையுடனான முத்தரையர்களின் தொடர்பு பற்றியும்   மதத்துடனான தொடர்பு பற்றியும் புதிய ஆய்வுகளுக்கு இந்தபெயர்  வழிவகுக்கும் என நம்பமுடிகிறது என்பதோடு .
இந்தக்குமிழிகல்வெட்டு பழங்கால பாசன முறைக்கு சான்றாக அமைந்திருப்பதாகவும் கந்தர்வகோட்டை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளில் மூத்தக்கல்வெட்டு என்றும் கூறினார்.

தொல்லியல் கழகத்தின் 30, 31 ஆவது சர்வதேச கருத்தரங்கம் மற்றும் ஆவணம் ஆய்விதழ் வெளியீட்டு விழா ( புதுக்கோட்டை)

மாண்புமிகு தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, மாவட்ட ஆட்சியர் திருமதி. கவிதாராமு , புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு . வை....