Tuesday, September 26, 2017

An ancient Labyrinth Mound , dates back to three thousand years , discovered in Ambalaththidal near keeramangalam , Pudukkottai district .

Archaeological Research Forum - Pudukkottai  conducted  field research . The team lead by Manganur Manikandan , and Kalvettu Rajendran found new evidences of an ancient civilization , and a Labyrinth mound in the site . Members of the foundation Pudugai Selva, Kasthuri Rengan , along with local volunteers Chandrasekar , Bharathiraaja , DrMathiyalagan , Mharaja , Press Reporters Bagadsing , Kannan , Muthuppazampathi , Saba explored the region . The site is filled with broken red and black pottery . 
An  ancient Labyrinth Mound , dates back to three thousand years , discovered in Ambalaththidal near keeramangalam , Pudukkottai district . 
     


The site has a ancient lime concrete mound with strange straight lines. After carefully examining the structure Manganur Manikandan  opined that Amabalathidal has lots of evidences for human existence of ancient periods . The new discovery helps us to understand the real age of the site . Usually Labyrinth Mounds are dated back to 3000 years . This is a very important clue to realize the age of the site.

Labyrinth Mounds Around the World

The Puzzles were made of clay . In Lusanna , in Sardinan Island has very important Labyrinth Mounds which belonged to 200 BC . Similar Mounds which are historically important found in Scandinavian Countries . Labyrinth Mounds around Tamil Nadu . Archaeological Researcher Sugavana Murugan and team has  discovered similar Labyrinth Mounds. In the district of Dharmapuri, near the Cauvery basin , in Periyakottai similar Labyrinth Mounds are found . They are in rectangular shape . Kidimedu area of Thiruppur also has Labyrinth Mounds , these were discovered by Researcher Ravikumar and Thiruppur Veera Rajendren Historical Foundation identified this . Apart from these sites Trichy , Tirunelveli also has Labyrinth Mounds .

Labyrinth mounds of Ambalaththidal .

Labyrinth Mounds retains their shape only if they are in lonely places away from human movements . They will escape sabotage if they are located in the places of worship . The discovery of the ancient place of worship ,the  mound in Amabalthidal is the very first of its kind in the district . A calcium mound of 20 feet length and breadth , has rectangular shaped maze carvings . The pottery marks found in the site give us a clue that these ancient structures 3 thousand  years old  opined Kalvettu Rajendran .

He also stated that it is a time critical mission , that State Archaeological Department and Archaeological Survey of India should take care of this site and conduct an immediate filed study . This site may rewrite the Tamil Nadu Archaeological Explorations .


புதுக்கோட்டை அருகே அம்பலத்திடல் பகுதியில் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய புதிர் நிலை கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே வில்வன்னி ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள அமபலத்திடல் பகுதியில் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனர்  மணிகண்டன், தலைவர் கரு. ராசேந்திரன், உறுப்பினர்கள்  கஸ்தூரிரங்கன், புதுகை செல்வா, சந்திரசேகர்,பாரதிராஜா, ஆகியோர் பாலகிருஸ்ணபுரம் கிராமத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் மதியழகன், மகாராஜா, பத்திரிக்கையாளர்கள் பகத்சிங், கண்ணன் முத்துப்பழம்பதி ஆகியோருடன் அம்பலத்திடலில் இரண்டாம் கட்ட    கள ஆய்வை மேற்கொண்டனர். அப்போது தாழிகள் கருப்பு சிவப்பு பனையோடுகள் விரவிக்கிடக்கும் அதே பகுதியில் இருக்கும் சுண்ணாம்பு திட்டையில்  சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு மனித வழிபாட்டுத்தலங்களாக கருதப்படும்  புதிர் நிலைகள்  அமைந்துள்ளதை கண்டறிந்தனர்.
 இது குறித்து மங்கனூர் ஆ.மணிகண்டன் கூறும் போது.
அம்பலத்திடல் பகுதியில் மனித இனம் வாழ்ந்ததற்காண ஏராளமான வரலாற்று சான்றுகள் புதையுண்டுள்ளது. அதில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த புதிர்நிலை கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இவ்விடத்தின் தொன்மையை வெளிப்படுத்தும் முக்கிய சான்றாக உள்ளது..








உலகளாவிய புதிர் நிலைகள்
கிரீட் தீவில் கிடைத்த ஃபைலோஸ் என்னும் பெயர் சூட்டப்பட்ட கி.மு. ஆயிரத்து 200 ஆண்டுகள் பழமையான களிமண்ணால் செய்யப்பட்ட புதிர்நிலைகள், சார்டீனியத்தீவுப் பிரதேசத்தில் கி.மு. 200 ம் ஆண்டைச் சேர்ந்த லுசன்னா என்ற இடத்திலுள்ள  புதிர்நிலைகள் மிக முக்கியமானதாக உள்ளன. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அதிக அளவிலான புதிர்நிலைகள் ஸ்காண்டிநேவிய நாடுகளில் காணப்படுகின்றன.


தமிழகத்தில் புதிர் நிலைகள்
தருமபுரி மாவட்டம் கம்பைய நல்லூர்,  காவிரி நுழையும் பகுதியான  பெரியகோட்டை பகுதியில்  செவ்வகம் வடிவிலான புதிர்நிலையும், கிருஷ்ணகிரி மாவட்டம் பைரேகவுணி யில் சுருள் வளைய வடிவ புதிர்நிலையும் தொல்லியல் ஆய்வாளர் சுகவனமுருகன் குழுவினரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது,  திருப்பூர் கிடிமேடு பகுதியில் புதிர்நிலை ஒன்றை தொல்லியல் ஆய்வாளர் ரவிக்குமார் குழுவினர் தலைமையிலான திருப்பூர் வீர ராஜேந்திரன் வரலாற்று பேரவையினர் அடையாளப்படுத்தியுள்ளனர். இதுமட்டுமின்றி திருச்சி ,திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களிலும் புதிர் நிலைகள் உள்ளன. 
அம்பலத்திடலில் புதிர்நிலை
புதிர் நிலைகளைப் பொறுத்த வரையில் மனித நடமாட்டம் குறைவான இடங்களிலோ அல்லது தொடர் வழிபாட்டில் உள்ள இடங்களிலோ இருந்தால் முழுமையானதாக காணப்படும்
முற்கால வழிபாட்டு தலமான புதிர்நிலை அம்பலத்திடலில் அடையாளம் காணப்பட்டுள்ளதன்  மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள முதல் புதிர் நிலையாக உள்ளது .  இது  சுண்ணாம்பு திட்டை மீது இருபுறங்களில் முழுமையாக சிதைந்தநிலையில் 20 அடி   நீள அகலத்துடன் சதுர வடிவில் , மேடு பள்ளத்துடன் கூடிய புதிர் பாதைகளோடு  நேர்க்கோடுகளாக அமைந்துள்ளன.
இதே இடத்தில்  அடையாளம் காணப்பட்ட  பானை குறியீடுகளை ஒப்புநோக்கும் போது  இங்குள்ள பழங்கால அமைப்புகள் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக கருத வேண்டியுள்ளது என்கிறார்.
மேலும் அமைப்பின் தலைவர் கரு.ராஜேந்திரன் கூறுகையில் அம்பலத்திடல் பகுதியில் மத்திய, மாநில தொல்லியல் துறை இந்தப் பகுதியை ஆய்வு மேற்கொண்டு இங்கு புதைந்துள்ள வரலாற்று சான்றுகளை ஆவணப்படுத்த வேண்டும். இன்னும் காலம் கடத்தினால் தடயமே இல்லாமல் அழிந்து போக வாய்ப்புகள் உள்ளது. மேலும் இங்கே கீழடிக்கு இணையான சான்றுகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது என்றார்.


               
இணையதொடர்புகள் :

Saturday, September 2, 2017

கிள்ளுக்கோட்டை அருகே நண்டம்பட்டிபட்டியில் இராசராசனின் முப்பாட்டனான பராந்தக சோழர் காலத்தைய கற்றளிக்கோவில் மண்ணில் புதைந்த நிலையில் கண்டுபிடிப்பு


புதுக்கோட்டை மாவட்டம் கிள்ளுக்கோட்டை அருகே நண்டம்பட்டி கிராமத்தில் உள்ள

வீமன்குளத்தின் கரையில் சில மாதங்களுக்கு முன்பு நீர்வரத்து  பாலம் அமைக்கும் 

பணி நடந்துள்ளது. அப்போது சில முழு உருவ கற்சிற்பங்கள் வெளிப்பட்டுள்ளன. 

இது குறித்து தொல்லியல் ஆய்வுக்கழகத்திற்கு மங்கனூர் பிரதீப் , நண்டம்பட்டி ஸ்டாலின் ஆகியோர்  தகவல் தெரிவித்தனர்.இதனைத்தொடர்ந்து தொல்லியல் ஆய்வுக்கழகத்தலைவர் இராசேந்தின், நிறுவனர் மணிகண்டன், ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார், உறுப்பினர் பூங்குடி ராசேந்திரன் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர். இதில் எட்டாம் நூற்றாண்டு முதல் பத்தாம் நூற்றாண்டு வரையிலான கற்சிற்பங்களும் ,பராந்தகசோழன் ஆட்சியைக்குறிக்கும் கல்வெட்டும், கற்றளிக்கோவிலின் கற்கலசமும், ஆவுடையும் அடையாளம் காணப்பட்டது. மேலும் இதேபகுதியின் சற்று அருகில் சமணதீர்த்தங்கரர் கற்சிற்பமும் கண்பிடிக்கப்பட்டுள்ளது.


கள ஆய்வு மேற்கொள்ளப்பட்ட இடம்


புதுக்கோட்டை மாவட்டத்திற்கும் தஞ்சாவூர் மாவட்டத்திற்கும் எல்லைப்பகுதியாக அமைந்துள்ள நண்டம்பட்டி கிராமத்தின் ஒரு பகுதி  புதுக்கோட்டை மாவட்டம் செங்களூர் ஊராட்சியிலும், மற்றொரு பகுதி  தஞ்சாவூர் மாவட்டம்  புதுக்குடி ஊராட்சியிலும் அமைந்துள்ளது. இவ்வூரின் குடுக்கன் தரிசு என்ற இடத்தில் ஏராளமான இடைக்காலத்தைய பானை ஓடுகள் விரவி கிடக்கின்றன. இதே பகுதியில் சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவில் ஆங்காங்கே கட்டுமானக்குவியல்களும், செங்கற்களும் காணமுடிகிறது.

கற்றளி கோயில்


அடித்தளம் முதல் கலசம் வரை முற்றிலும் கருங்கல்லை கொண்டு எழுப்பப்பட்ட கற்றளிக்கோவில் வழிபாட்டில் இருந்து வந்துள்ளது. இது முற்கால சோழர் கலைப்பாணியில் கோயில் கட்டுமான மரபுகளை பின்பற்றி கட்டப்பட்டிருப்பதை புதைந்த நிலையில் அடையாளம் காணப்பட்ட விமான கற்கலசம் , தூண்கள், மற்றும்  தூண்களை தாங்கிப்பிடிக்கும் வகையில் அடித்தளமாக அமைக்கப்பட்ட இரண்டு அடி உயரமுள்ள வட்டவடிவிலான உருளைக்கற்கள் , கோவிலின் விமானத்தின் புறச்சுவர் விளிம்புகளில் அமைக்கப்பட்ட குரங்கு மற்றும் தேவகணங்களின் உடைந்த தலைப்பகுதிகள் ஆகியவற்றின்  மூலம் இவ்விடத்தில் ஒரு முழுமையான கற்றளிக்கோவில் இருந்துள்ளதை உறுதிபடுத்த முடிகிறது




கற்றளியின் காலம்


கட்டுமானப்பகுதிக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டுள்ள கல்வெட்டை ஆதாரமாகக்கொண்டு மதிரை கொண்ட கோப்பரகேசரியான பராந்தகன் ஆட்சி செய்த கி.பி 907 முதல் 950 க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுப்பியிருக்கக்கூடும் என அனுமானிக்க முடிந்தாலும் இங்கே காணப்படும் சிற்பங்கள் குறிப்பாக முருகன் , கௌமாரி உள்ளிட்ட சிற்பங்கள் காலத்தால் முந்தையதாக இருக்க வாய்ப்புள்ளது. எனில் இக்கற்றளி இதற்கு முன்பே கட்டமைக்கப்பட்டு அதன் பிறகு கட்டுமானங்களை நீட்டிருத்திருக்கவும் வாய்ப்புள்ளது.



அடையாளம் காணப்பட்ட கற்சிற்பங்களும் காலமும்



தமிழர்களின் தாய்வழிச்சமூகத்தின் அடையாளமான முற்கால சோழர் கலைப்பாணியிலான தவ்வை,மாந்தன் , மாந்தி சிற்பம் , அமர்ந்த நிலையில் பல்லவர் கலைப்பாணியிலான  முருகன் சிற்பங்கள் இரண்டும்,சப்த கன்னியரில் ஒருவரான கௌமாரி சிற்பமும்,முற்கால சோழர் கலைப்பாணியில் உமையாளை மடியமர்த்திய நிலையில் சிவனார் சிற்பம் ஒன்றும், தரையில் கையூன்றிய நிலையில் தேவியாரை சாந்தமாக்கும் தம்பதி சகிதமான சிவனார் சிற்பமும், கையில் வில்தாங்கிய நிலையில் பிச்சாடனார் சிற்பமும், மிக நேர்த்தியான வடிவில் பிரம்மா சிற்பமும், முகம் சிதைந்த சண்டிகேசுவரர் சிற்பமும், உடல் இல்லாத நிலையில் இடுப்பிலிருந்து பாதம் வரை காணப்படும் பைரவர் சிற்பமும், மிக நேர்த்தியான அய்யனார் சிற்பமும், நின்ற நிலையில் பார்வதியார் சிற்பமும், நான்கு அடி நீளம் இரண்டு அடி உயரமுள்ள இரண்டு நந்தி சிற்பங்களும், தாமரை இதழ் வடிவில் அமைக்கப்பட்ட ஆவுடையும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி மண்ணில் புதைந்த நிலையில் முட்புதர்களுக்குள்ளாக ஏராளமான சிற்பங்கள் இருப்பதை அனுமானிக்க முடிகிறது.


சமண தீர்த்தங்கரர் சிற்பம்


தியான கோலத்தில் சுமார் ஒன்றரை அடி உயரமுள்ள முக்குடை அமைப்புடன் கூடிய சமண தீர்த்தங்கரர் சிற்பம் ஒன்றும் இக்கோவில் கட்டுமானங்கள்  கண்டறியப்பட்டுள்ள பகுதிக்கும் அருகில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பகுதியிலேயே சமணப்பள்ளி இருந்திருக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும் இப்பகுதியில் சமணமும் சைவமும் பரவி இருந்திருக்கும் என்று அனுமானிக்க முடிகிறது.



இராசராசனின் முப்பாட்டன் பராந்தக சோழன் கல்வெட்டு


கோயில் கட்டுமானப்பகுதிக்கு மிக அருகில் உள்ள வயல்வெளியில் காணப்படும் கல்வெட்டில் மங்கல வரியுடன்


“மதிரைகொண்ட கோப்பரகே(சரி) ..... மியானலூர்ளக்ய மல்ல முத்தரையனினு....” என்ற செய்தியடங்கிய துண்டு கல்வெட்டு கிடைத்திருப்பதன் மூலம் இராசராசனின் முப்பாட்டனான மதிரைகொண்ட கோப்பரகேசரி என்ற பட்டப்பெயருடன்  வழங்கப்பட்ட பராந்தக சோழன் காலத்தில் மியானலூர்ளக்ய மல்ல முத்தரையன் என்பவர் இக்கற்றளியை எழுப்பிருக்கக்கூடும் அல்லது இக்கோவிலை புனரமைத்திருக்கக்கூடும் என அனுமானிக்க முடிகிறது.



இந்தக்கள ஆய்வில் மங்கனூர் சுதிவர்மன் , கிள்ளுக்கோட்டை லெட்சுமணன்.  நண்டம்பட்டி கிராமத்தைச்சேர்ந்த இளைஞர்கள்  சூரியமூர்த்தி, ரஜினி, ஜான், வடிவேல்,பிரேம்குமார், டேவிட், ஜெயசீலன்,வடிவேல் கௌதம் உள்ளிட்ட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.









தொல்லியல் கழகத்தின் 30, 31 ஆவது சர்வதேச கருத்தரங்கம் மற்றும் ஆவணம் ஆய்விதழ் வெளியீட்டு விழா ( புதுக்கோட்டை)

மாண்புமிகு தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, மாவட்ட ஆட்சியர் திருமதி. கவிதாராமு , புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு . வை....