Showing posts with label தொல்லியல். Show all posts
Showing posts with label தொல்லியல். Show all posts

Sunday, September 5, 2021

புதுக்கோட்டை மாவட்டத்தில் பாதுகாப்பு பணி ஒப்பந்தத்தை வெளிப்படுத்தும் ஆசிரியம் கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

 

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டாரத்திலுள்ள மலையடிப்பட்டி (செவ்வலூர் கிராமம்)மேலப்பனையூர் தேவர்மலை ஆகிய ஊர்களில் தொல்லியல் ஆய்வுக்கழகத்தலைவர் கரு.ராஜேந்திரன் நிறுவனர் ஆ.மணிகண்டன் ஆய்வுக்குழு உறுப்பினர்கள் கஸ்தூரி ரெங்கன் , மணிசேகரன்,  பீர்முகமதுசை.மஸ்தான்பகுருதீன்மு.முத்துக்குமார்,  பா.ரமேஷ்குமார், ஆறுமுகம்  ஆகியோரால்  மூன்று ஆசிரியம் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இக்கல்வெட்டுகள் குறித்து தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழக தொல்லறிவியல் துறை முனைவர் பட்ட ஆய்வாளர் ஆ.மணிகண்டன் கூறியதாவது ,

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிலையான ஒருங்கிணைந்த ஆட்சிமுறை மறையத்தொடங்கிய சூழலில் அதிக நிலம் படைத்தவர்கள் குறுநில மன்னர்களாக செயற்பட்டு வந்துள்ளனர். தமது நிர்வாகத்திற்குட்பட்ட மக்களுக்கும்அவர்களின் உடைமைகளுக்கும்வெளியூரிலிருந்து வணிகம் செய்யும் வணிகர் மற்றும் வணிகப்பொருட்களுக்கும் உரிய பாதுகாவல் பணியை செய்ய வேண்டியிருந்ததன் பொருட்டு நம்பிக்கை மிகுந்தவர்களை அப்பணியில் நியமித்து வந்துள்ளனர். அது பற்றிய அறிவிப்பை வெளிப்படுத்தும் ஆசிரியம் கல்வெட்டுகள் தேவர்மலைபனையூர் மலையடிப்பட்டி ஆகிய ஊர்களில் எமது குழுவினரால் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

 

ஆசிரியம் கல்வெட்டுகள் :

 ஆசிரியம் கல்வெட்டுகள் தொல்லியல் ஆய்வாளர்கள் அஞ்சினான் புகலிடம் வழங்கியதை குறிப்பாதாகவே கருதி வருகின்றனர். பாதுகாப்பு வழங்குதல் என்ற பொருளுடன் தொடர்பு படுத்தி ஆஸ்ரயம் என்ற என்ற சமற்கிருத வேர்ச்சொல்லிலுருந்து பெறப்பட்ட சொல்லாடலாகவே பார்க்கப்பட்டு வருகிறது.


 

இதுவரை தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 67  கல்வெட்டுகளில் ஆசிரியம் ஆசுரியம்அஸ்ரீயம்ஆஸ்ரயம் ஆச்ரயம் என பல்வேறு சொல்லாடல்கள் இருந்தாலும் எமது ஆய்வில் பட்டியலிடப்பட்ட கல்வெட்டுகளில் 53 கல்வெட்டுகளில் ஆசிரியம் என்ற சொல்லாடலும், 8 கல்வெட்டுகளில் ஆஸ்ரீயம் என்றும், 3 கல்வெட்டுகளில் ஆசுரியம் என்றும் உள்ளது.  கல்வெட்டுகளில் மட்டுமே ஆஸ்ரயம் மற்றும் ஆச்ரயம் என்ற சொல்லாடல் கையாளப்பட்டுள்ளது.


     

எனவே இதனை சமற்கிருத சொல் என்ற கருத்து  பொருந்தாது என்பதை மேற்கண்ட புள்ளிவிவரங்கள் நிறுவுகின்றன. ஆசிரியம் என்ற தமிழ்ச்சொல் சங்கப்பாடல்களிலும் காணப்படுகின்றன. ஆசிரியப்பா என்பது  ஒரு கருத்தை சுருங்கச்சொல்லுதல் என்ற பொருள்படும்படி பாவகை என வரையறுக்கப்படுகிறது.. தமிழ் இலக்கிய அகராதிகள்  ஆசிரியர் என்பதை  ஆசு + இரியர்  அதாவது   பிழைகளை நீக்குபவர் அல்லது குற்றம் களைபவர் என்று பொருளை சுட்டுகின்றன.

 

இதே அடிப்படையில் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ள ஆசிரியம் என்பதையும் பொருத்தி பார்க்கும்போது திருட்டுகொள்ளை  நடைபெறாமல் காத்து, பொதுப்பொருட்களுக்கு அரணாக இருத்தல் என்று எச்செயலிலும் வாக்கு தவறாமை, தவறு நடைபெறாமல் காக்கும் பொறுப்புடையவருக்கான உடன்படிக்கையேற்பு  என்று பொருள் கொள்ளலாம்.

 

புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஆசிரியம் கல்வெட்டுகள்:

 

   மேலப்பனையூர் கிராமத்தில் புதிதாக அடையாளம் காணப்பட்ட கல்வெட்டு தற்போது புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில்  ஸ்வஸ்தி  ஸ்ரீ மது இராயப்பர் மகந் குமாரந் பாகுய நாயக்கர்க்குப்பனையூர் குளமங்கலம் ஆசிரியம் ராயப்பர் என்பாரின் மகன் பாகுய நாயக்கர் என்பார் பனையூர் குலமங்கலத்ததை நிர்வகிக்கும் உரிமை பெற்றதை அறிவிக்கிறது இக்கல்வெட்டின் எழுத்தமைதியின் அடிப்படையில் பொது ஆண்டு 14 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியை சேர்ந்ததாக கணிக்க முடிகிறது. இன்றளவும் பனையூர் கிராமத்தில் ஆசிரியம் குடும்பம் என்று குடும்பத்தினரை அழைக்கும் வழக்கம் இருப்பதை கள ஆய்வில் அறிந்துகொண்டோம்.

 

பொன்னமராவதி வட்டம், செவலூர் சேகரம் மலையடிப்பட்டி கிராமத்தின் குடியிருப்புகளுக்கு வட புறம் தனியார் தரிசு நிலத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள கல்வெட்டு சிதைந்துள்ளதால் முழுமையாக வாசிக்க முடியவில்லை என்றாலும் கடைசிப்பகுதியில் பொன்னமராபதிநாட்டு வடபற்றுச் செவ்வலூர் ஏவவிருத்தரையர்கள் ஆசுரியம்அதாவது பொன்னமராவதி நாட்டின் வடப்பற்றான செவ்வலூர் ஏவ்விருத்தரையர்கள் எனும் குழுவினர் கல்வெட்டு நட்டுவிக்கப்பட்டுள்ள பகுதியை பாதுகாக்கும் பொறுப்பை பெற்றிருந்ததை அறிவிக்கிறது. கல்வெட்டு கி.பி 16 நூற்றாண்டைச்சேர்ந்ததாக  கணிக்க முடிகிறது.

   

திருமயம் வட்டம் மல்லாங்குடி ஊராட்சிக்குட்பட்ட தேவர் மலை வடபுறம் உள்ள வயல்வெளியில் கடந்த 2016 ஆண்டு கரு.ராஜேந்திரன் அவர்களால் அடையாளம் காணப்பட்ட கல்வெட்டில்   ஸ்வஸ்தி ஸ்ரீதேவமலையில் நாயக்கர் நம்பி அகமறமாணிக்கர் ஆசிரியம்என்ற தகவல் பொறிக்கப்பட்டுள்ளது.

     , தேவர்மலையின் இறையான நாயக்கர் நம்பிகளுக்கான கோவில்  நிர்வாக உரிமையை அகமறமாணிக்கர் என்பார் பெற்றிருந்ததை குறிக்கும் வகையில் தகவல் பொறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டின் காலம் பொ.ஆ பதிமூன்றாம் நூற்றாண்டைச்சேர்ந்தாக கணிக்க முடிகிறது.  என்றார்.


 

புதிய கல்வெட்டின் முக்கியத்துவம் குறித்து கரு.ராசேந்திரன் கூறியதாவது,        

     குடிமக்கள்  விவசாய விளை பொருட்கள் கால்நடைகள் உள்ளிட்டவைகளுக்கான பாதுகாப்பு ,  வணிக பொருட்கள் மற்றும் வணிகர்களின் பாதுகாப்பு வழங்குபவர் பற்றிய அறிவிப்பு  , நீர்நிலைகளை ஒப்படைத்தையும்குளம்நீர் வரத்து வாய்க்கால்கள்கலிங்குகளை சீர் செய்தவருக்கும்நாட்டவர்களிடையே அமைதியை நிலை நாட்டியமைக்காகவும் மரியாதை செய்யும் பொருட்டும் ஊரணியை ஒரு குறிப்பிட்ட இனத்தவருக்கு விட்டுக்கொடுக்கவும்புரவரி வசூலித்தல் வணிகக்குழுக்களின் முகாம்களாக இருந்த இடங்களை அஞ்சினான் புகலிடமாக அறிவித்தல்தேவதான நிலங்களை காக்கும் பொறுப்புகோவிலுக்கு நெல் உள்ளிட்ட பொருட்களை வழங்குவதற்கான அறிவிப்புகுளத்தை பணி செய்து கொடுத்தவர் இன்னார் என்பதற்கான அறிவிப்புகோவிலுக்கு நிலக்கொடை வழங்கிய அறிவிப்பு  என ஒரு குறிப்பிட்ட நபரிடமோ அல்லது ஊரார்களிடமோ உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டு அதனை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஆசிரியம் கல்வெட்டுகள் ஊரின் மையத்திலோ அல்லது மக்கள் எளிதில் அணுகும் இடத்திலோ வைக்கப்படுவது வழக்கமாக இருந்துள்ளது. மேற்சொன்ன கருத்துக்களை உறுதி செய்யும் வகையில் தற்போது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் மூன்றும் ஊரையோ கோவிலையோ  நிர்வகிக்கும் பொறுப்பு வகிப்பவரை அறிவிக்கும் பொருட்டு நடப்பட்டுள்ளதை புரிந்துகொள்ள முடிகிறது என்றார்.

 

 

 

 

 

Thursday, December 27, 2018

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு திருடர்களிடம் தப்பிய தீர்த்தங்கரர் சிற்பம் - புதுக்கோட்டை மாவட்டத்தில் அக்னி ஆற்றங்கரை அருகே சமணப்பள்ளி கட்டுமானம் சமண தீர்த்தங்கரர் சிற்பங்களுடன் கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஆத்தங்கரைவிடுதி ஊராட்சி கீழ வாண்டான் விடுதி கிராம எல்லைக்குட்பட்ட சிவனார் மேடு என்ற இடத்தில் சுமார் 97 சென்ட் அளவிற்கு செங்கல் கட்டுமானத்தின் சிதிலங்களும் , மிகச்சிறிய அளவிலான தாமரை மீதமர்ந்த பத்மபிரபர் எனும் சமண தீர்த்தங்கரரின்  தலை சிதைந்த  சிற்பமும், இந்த இடத்திலிருந்து எடுத்து செல்லப்பட்டு  கீழ வாண்டான்விடுதி  நம்பிராஜன் குடும்பத்தினரால் சிவனார் என்ற பெயரில் வழிபாட்டிலுள்ள  ஐந்து அடி உயரமுள்ள மகா வீரர்  சிற்பமும்    தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் ஆ.மணிகண்டன் , தலைவர் கரு.ராஜேந்திரன் ,ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் , மரபு நடை ஒருங்கிணைப்பாளர்  கஸ்தூரி ரங்கன் , ஆய்வுக்குழு உறுப்பினர்கள் ம.மு.கண்ணன் , பா.ரமேஷ்குமார்,ஆத்தங்கரைவிடுதி உயர்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்ற பொறுப்பாசிரியர்கள் பழனிசாமி , கண்ணன் ஆகியோரடங்கிய குழுவினரால்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 


புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியின் வரலாற்றை தொகுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம் இது சார்ந்த  களப்பயணத்தின் போது பதிவு செய்யப்படாத வரலாற்று சான்றுகளை தொகுத்து வருகிறோம். இதன் ஒரு பகுதியாக தற்போது பத்தாம் பத்தாம் நூற்றாண்டில் இயங்கிய சமணப்பள்ளி அடையாளம் காணப்பட்டுள்ளது.

அக்னி ஆறும் சமணமும்

அக்கினி ஆறு புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் பெரிய குளத்தில்  தொடங்கி  திருமணஞ்சேரி வரையிலும் அதன் தொடர்ச்சியாக  தஞ்சாவூர் மாவட்டம் இடையாத்தி கொள்ளுக்காடு மற்றும் கீழத்தோட்டம் வழியாக 78 கிலோ மீட்டர் வரை பாய்ந்து வங்கக்கடலில் கலக்கிறது ,


அக்கினி ஆறானது மிகப்பழமையான ஆறாக கருதப்படுகிறது. மேலும் இது  கடந்த காலங்களில் அஞ்ஞான விமோச்சனி என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்திருப்பதும் , அஞ்ஞானத்திற்கு இணையாக வழங்கப்படும் அக்கியானி என்ற சொல் மருவி அக்னி ஆறு என்று பெயராக மாற்றம் பெற்றிருக்கும் என அனுமானிக்க முடிகிறது.
இந்த ஆற்றின் பெயரே சமணக்கொள்கையை தங்கியிருப்பதாக கருத முடிகிறது.  மேலும் இக்கருத்தை உறுதி செய்யும் வகையில்  அக்கினி ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள வாழமங்கலம் , மங்கத்தேவன் பட்டி , மோசகுடி , கோவில் வீரக்குடி , செம்பாட்டூர், புத்தாம்பூர் , உள்ளிட்ட ஊர்களில் சமணத்தீர்த்தங்கரர் சிற்பங்கள் அடையாளங்காணப்பட்டிருப்பதும் தற்போது கீழ வாண்டான் விடுதியிலும் சமணப்பள்ளி அடையாளப்படுத்தபட்டிருப்பதன் மூலம் இந்த ஆற்றங்கரையில் சமணம் பரவி இருந்தது சார்ந்து புதிய வரலாற்று ஆய்வுகளுக்கு வழிவகுக்கும் என நம்பலாம்.
சமணப்பள்ளி அமைவிடம்
கீழ வாண்டான் விடுதி மற்றும் மேல வாண்டான் விடுதி எல்லைப்பகுதியில் அக்கினி ஆற்றின் தென் புறத்தில்  அமைந்துள்ள சிவனார் திடல் என்று அப்பகுதியினரால் அழைக்கப்படும் இடத்தில் சுமார் 97 சென்ட் பரப்பளவில் 200 அடி  நீள அகலத்துடன் செங்கல் கட்டுமான மேடு காணப்படுகிறது. ஒரு இடத்தில் “ ப ” வடிவ அறையின் அடிமானச்சுவரின் மேற்பகுதி 3 அடி 9  அங்குலத்துடன் உள்ளது , கீழ்ப்புறத்தின்  இரண்டு சுவர்களும் 2 அடி  6 அங்குலம் கொண்டவையாக உள்ளன , இந்த அறையின் உட்கூட்டுப்பரப்பளவு 9 அடி  5 அங்குலத்துடன் உள்ளது . புதிதாக அடையாளம் காணப்பட்ட இரண்டு சிற்பங்களும் இவ்விடத்தில் இருந்துள்ளதன் மூலம் இந்த செங்கல் கட்டுமானம் சமணப்பள்ளிதான் என உறுதி செய்ய முடிகிறது.



சமணப்பள்ளி கட்டுமானம் 

17x  16x 3 செ.மீ , 22 x 13.5x 4 செ.மீ, 24x 12x3  செ.மீ   உள்ளிட்ட  அளவுகளைக்கொண்ட  செங்கல் அதிகமாக சிதறி காணப்படுகிறது. இவை கங்கை கொண்ட சோழபுரத்தின் மாளிகை மேட்டில் இருந்த செங்கல் அளவுகளோடு ஏறக்குறைய ஒத்துள்ளது ஆனால்  இப்பகுதியில் சுண்ணாம்பு படிமங்களோ , வேறு எந்த கட்டுமான இணைப்பு கற்காரைகளோ  காண முடியவில்லை எனவே இது பதினொன்றாம் நூற்றாண்டிற்கு முந்தைய  செங்கல் கட்டுமானமாக இருக்கக்கூடும் என அனுமானிக்க முடிகிறது. ஒரு சில இடங்களில் செம்புராங்கல் காணப்படுகிறது இது கட்டுமானத்தின் அடித்தளமாக பயன்படுத்தியிருக்க வாய்ப்புள்ளது. இது முழுக்க செங்கல் மற்றும் களிமண் கொண்ட கட்டுமானமாக இருந்துள்ளதையும், இந்த சமணப்பள்ளி  கற்றளியாக மறு உருவாக்கம் செய்யப்படாமல் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கைவிடப்பட்டுள்ளது என புரிந்து கொள்ள முடிகிறது.


கீழ வாண்டான் விடுதி மகாவீரர்

கீழ வாண்டான்விடுதியில் தற்போது சிவனார் என்ற பெயரில்  வழிபாட்டிலுள்ள சிற்பம் ஐந்து அடி உயரம் மூன்று அடி அகலம் கொண்டதாக உள்ளது.  இது வர்த்தமானர் எனும் சமண சமயத்தின் இருபத்து நான்காவது   தீர்த்தங்கரரான  மகாவீரர் திருமேனி என அடையாளங்காணப்பட்டுள்ளது.

இச்சிற்பம் திகம்பரராக, தியான கோலத்துடன்,  சுருள் முடி தலையுடனும், திறந்த கண்கள், நுனியில் சிறிது சேதமடைந்த மூக்கு , நீண்ட துளையுடைய காதுகள் , புன்முறுவலுடன் கூடிய உதடுகள் ,  விரிந்த மார்புடன்  அமர்ந்த நிலையில் அமைக்கப்பட்டுள்ளது .
 தலையின்  பின்புறமாக முக்காலத்தையும் உணர்த்தும் விதமாக ஒளிவீசும் பிரபா வளையமும்,  மேற்பகுதியில் சந்திராதித்தம் , நித்த விநோதம் , சகல பாசானம் எனும்     முக்குடையும் , பின்புலத்தில்  குங்கிலிய மரமும்  சிற்பத்தின் பக்கவாட்டில் சித்தாக்கியா இயக்கியும், இயக்கன் மாதங்கனும் சாமரத்துடன் இருப்பதாக வடிக்கப்பட்டுள்ளது,    இச்சிற்பம் மகாவீரர் என்பதை  உறுதிப்படுத்தும் அடையாளமான சிங்க முத்திரை கட்டுமானத்தில் மறைந்துள்ளதாக அறிய முடிகிறது .



கீழவாண்டான் விடுதி மிகச்சிறிய தீர்த்தங்கரர் சிற்பம்

அடையாளங்காணப்பட்ட மற்றொரு சமண தீர்த்தங்கரர்  சிற்பம் மிகச்சிறிய அளவில் 17   சென்டிமீட்டர்   உயரம் கொண்டதாகவும் ,  தலை சிதைந்த நிலையில், தாமரை மேல் அமர்ந்த தியான  நிலையிலுள்ளது, எனவே  ஆறாவது தீர்த்தங்கரரான   பத்ம பிரபராக இருக்கலாம் என கருத முடிகிறது. எனினும் சமணப்பள்ளிகளில் மகாவீரர் மற்றும் ஆதிநாதரின் சிற்ப தொகுதிகளே வழிபாட்டிலிருந்துள்ளதாலும், தென் கயிலையில் தாமரை மீது அமர்ந்த நிலையில் ஆதிநாதர்   தவமிருந்ததாக சொல்லப்படும் சான்றுகள் மூலம் முதலாம் தீர்த்தங்கரரான ஆதிநாதர் சிற்பமாகவும் இருக்க வாய்ப்புள்ளது.


சிற்பத்தின் வலப்புறம் அமைந்துள்ள இயக்கியர் சிற்பம் 3 சென்டிமீட்டர் அளவில் மிக நுணுக்கமான முறையில்  மண்டியிட்டவாறு சாமரம் வீசுவதாக  வடிக்கப்பட்டுள்ளது. இடப்புறம் உள்ள இயக்கியரின் சிற்பம்  சிதைந்துள்ளது.


தாமரை மலரின் காம்பிலிருந்து இரண்டு புறமும்  கீழ்ப்புறமாக சுருண்ட கொடி அமைப்புகள் காட்டப்பட்டுள்ளது. இதில்  மண்டியிட்டு கை கூப்பிய நிலையில் தனித்தனியாக நான்கு  மனித உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. 


திருடர்களிடம் தப்பிய சிற்பம்

சிவனார் மேடு என்ற இடத்தில் இருந்த ஐந்தடி உயரமுள்ள தீர்த்தங்கரர் சிற்பம் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே மாட்டு வண்டி மூலம் கடத்திச் சென்றுகொண்டிருந்த  சிலை திருடர்களுக்கு திடீரென்று உடல்நலக்குறைவாலும், மாடுகள் மயக்கமடைந்ததாலும்,உயிர் பயத்தால்  கடத்தி வந்தவர்கள் ,  தீர்த்தங்கரர் சிற்பத்தை ஆத்தங்கரை விடுதி வயல் வெளியில் தூக்கி வீசிவிட்டு சென்றுவிட அதனை ஆத்தங்கரைவிடுதி அம்பலக்காரர் தனது பாதுகாப்பில் வைத்திருந்தாகவும் . இதையறிந்த நம்பிராஜனின் குடும்பத்தினர் தாங்கள் வழிபட்டு வந்த  சாமியை எங்களுக்கு தாருங்கள் என்று கேட்டு பெற்று வந்து அதனை சிறு கோயிலாக எழுப்பி வழிபட்டு வருவதாகவும் வழிபட்டு வருபவர்கள் கூறுகின்றனர், இது போன்ற நம்பிக்கை கதைகளே பல சிற்பங்களுக்கு காவலாக இருந்து வருகிறது .




  

Thursday, December 14, 2017

Tax Collecting Rights to the Local Body - reveals newly found Chola Era's stone inscription




A new stone inscription is discovered at a remote village named Sirunjunai,  Annavasal Taluk of Pudukkottai District. This newly found inscription mentions in the 13th Century local bodies had the right to collect taxes. Earlier members of archaeological preservation club of Government School of Ellaippatti, Aiswarya, Nikalya and Ayanraj informed their club coordinator Kasthuri Rengan about the presence of the stone inscription in Sirusunai Village. He then informed the  Disctrict co- ordinator Manikandan Arumugam. Heritage Preservation club of Pudukkottai team, Kalvettu Rajendren President of  Pudukkottai Archaeological Research Forum, Muthukkumar co-ordinator of ARF , probed the site and found this stone inscription with the help of the school children. 

Manikandan, founder of  Pudukkottai Archaeological Research Forum (ARF) and district co – ordinator of Heritage Preservation club of Pudukkottai Schools opined that 
The remains of the temple at this site belongs to Aranya Vidangar, Shiv Temple of 13th Century. Further evidences are also proves this fact. Another inscription on the huge rock in the middle of the pond says in 1243 B.C a Periyapillai Marunthaalvan donated 200 coins and land donations and the measure of their harvest to be donated to the temple. This particular stone inscription was found years earlier by Kalvettu Rajendren. In the same site Square shaped Aavudai, dilapidated Nandhi, Murugan on Peacock is also found. These idols are preserved by the villagers. A new stone inscription also found near the same site.
 Puravari, a tax levied for villages exempt from Government Tax, can be collected by the local bodies as per local auditing systems guidelines. The officials who are empowered to collect this tax were titled "sekaranthaar". In the Chola era these details were carved in stone pillars and erected in the temple, which served as then administrative posts for villages. 
The message in the new found stone pillar The inscription starts with Mangal lines, and after the Mangal Lines it reads Sirunjunaiyoor, Viratharaaja Bayangara Sathurvethi Mangalam Puravari Sikaranathaar Aasiriyam" As per this inscription Sirunjunai Village was known as Virutha Raja Bayangara Sathurvethi Mangalam, and the tax levying powers were endorsed to the official titled "Seekaranam". This inscription sends a surprising insight into Chola Era's Taxing Procedures, and the local bodies were enabled to Levi taxes and maintain their infrastructure. "This democratic measure was practiced in Chola Era is very surprising indeed" opined Manikandan.





Tuesday, September 26, 2017

புதுக்கோட்டை அருகே அம்பலத்திடல் பகுதியில் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய புதிர் நிலை கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே வில்வன்னி ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள அமபலத்திடல் பகுதியில் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனர்  மணிகண்டன், தலைவர் கரு. ராசேந்திரன், உறுப்பினர்கள்  கஸ்தூரிரங்கன், புதுகை செல்வா, சந்திரசேகர்,பாரதிராஜா, ஆகியோர் பாலகிருஸ்ணபுரம் கிராமத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் மதியழகன், மகாராஜா, பத்திரிக்கையாளர்கள் பகத்சிங், கண்ணன் முத்துப்பழம்பதி ஆகியோருடன் அம்பலத்திடலில் இரண்டாம் கட்ட    கள ஆய்வை மேற்கொண்டனர். அப்போது தாழிகள் கருப்பு சிவப்பு பனையோடுகள் விரவிக்கிடக்கும் அதே பகுதியில் இருக்கும் சுண்ணாம்பு திட்டையில்  சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு மனித வழிபாட்டுத்தலங்களாக கருதப்படும்  புதிர் நிலைகள்  அமைந்துள்ளதை கண்டறிந்தனர்.
 இது குறித்து மங்கனூர் ஆ.மணிகண்டன் கூறும் போது.
அம்பலத்திடல் பகுதியில் மனித இனம் வாழ்ந்ததற்காண ஏராளமான வரலாற்று சான்றுகள் புதையுண்டுள்ளது. அதில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த புதிர்நிலை கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இவ்விடத்தின் தொன்மையை வெளிப்படுத்தும் முக்கிய சான்றாக உள்ளது..








உலகளாவிய புதிர் நிலைகள்
கிரீட் தீவில் கிடைத்த ஃபைலோஸ் என்னும் பெயர் சூட்டப்பட்ட கி.மு. ஆயிரத்து 200 ஆண்டுகள் பழமையான களிமண்ணால் செய்யப்பட்ட புதிர்நிலைகள், சார்டீனியத்தீவுப் பிரதேசத்தில் கி.மு. 200 ம் ஆண்டைச் சேர்ந்த லுசன்னா என்ற இடத்திலுள்ள  புதிர்நிலைகள் மிக முக்கியமானதாக உள்ளன. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அதிக அளவிலான புதிர்நிலைகள் ஸ்காண்டிநேவிய நாடுகளில் காணப்படுகின்றன.


தமிழகத்தில் புதிர் நிலைகள்
தருமபுரி மாவட்டம் கம்பைய நல்லூர்,  காவிரி நுழையும் பகுதியான  பெரியகோட்டை பகுதியில்  செவ்வகம் வடிவிலான புதிர்நிலையும், கிருஷ்ணகிரி மாவட்டம் பைரேகவுணி யில் சுருள் வளைய வடிவ புதிர்நிலையும் தொல்லியல் ஆய்வாளர் சுகவனமுருகன் குழுவினரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது,  திருப்பூர் கிடிமேடு பகுதியில் புதிர்நிலை ஒன்றை தொல்லியல் ஆய்வாளர் ரவிக்குமார் குழுவினர் தலைமையிலான திருப்பூர் வீர ராஜேந்திரன் வரலாற்று பேரவையினர் அடையாளப்படுத்தியுள்ளனர். இதுமட்டுமின்றி திருச்சி ,திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களிலும் புதிர் நிலைகள் உள்ளன. 
அம்பலத்திடலில் புதிர்நிலை
புதிர் நிலைகளைப் பொறுத்த வரையில் மனித நடமாட்டம் குறைவான இடங்களிலோ அல்லது தொடர் வழிபாட்டில் உள்ள இடங்களிலோ இருந்தால் முழுமையானதாக காணப்படும்
முற்கால வழிபாட்டு தலமான புதிர்நிலை அம்பலத்திடலில் அடையாளம் காணப்பட்டுள்ளதன்  மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள முதல் புதிர் நிலையாக உள்ளது .  இது  சுண்ணாம்பு திட்டை மீது இருபுறங்களில் முழுமையாக சிதைந்தநிலையில் 20 அடி   நீள அகலத்துடன் சதுர வடிவில் , மேடு பள்ளத்துடன் கூடிய புதிர் பாதைகளோடு  நேர்க்கோடுகளாக அமைந்துள்ளன.
இதே இடத்தில்  அடையாளம் காணப்பட்ட  பானை குறியீடுகளை ஒப்புநோக்கும் போது  இங்குள்ள பழங்கால அமைப்புகள் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக கருத வேண்டியுள்ளது என்கிறார்.
மேலும் அமைப்பின் தலைவர் கரு.ராஜேந்திரன் கூறுகையில் அம்பலத்திடல் பகுதியில் மத்திய, மாநில தொல்லியல் துறை இந்தப் பகுதியை ஆய்வு மேற்கொண்டு இங்கு புதைந்துள்ள வரலாற்று சான்றுகளை ஆவணப்படுத்த வேண்டும். இன்னும் காலம் கடத்தினால் தடயமே இல்லாமல் அழிந்து போக வாய்ப்புகள் உள்ளது. மேலும் இங்கே கீழடிக்கு இணையான சான்றுகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது என்றார்.


               
இணையதொடர்புகள் :

தலையில்லா புத்தர் சிலை - ஆவுடையார்கோவிலில் கண்டுபிடிப்பு - புத்த சமய வரலாற்றில் புதிய வெளிச்சம்

         புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் பெரிய கண்மாய் ,   பெருமடை வாய்க்கால் மேட்டில் தலையில்லா   புத்தர் சிலையை ,   புதுக்க...