Thursday, December 27, 2018

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு திருடர்களிடம் தப்பிய தீர்த்தங்கரர் சிற்பம் - புதுக்கோட்டை மாவட்டத்தில் அக்னி ஆற்றங்கரை அருகே சமணப்பள்ளி கட்டுமானம் சமண தீர்த்தங்கரர் சிற்பங்களுடன் கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஆத்தங்கரைவிடுதி ஊராட்சி கீழ வாண்டான் விடுதி கிராம எல்லைக்குட்பட்ட சிவனார் மேடு என்ற இடத்தில் சுமார் 97 சென்ட் அளவிற்கு செங்கல் கட்டுமானத்தின் சிதிலங்களும் , மிகச்சிறிய அளவிலான தாமரை மீதமர்ந்த பத்மபிரபர் எனும் சமண தீர்த்தங்கரரின்  தலை சிதைந்த  சிற்பமும், இந்த இடத்திலிருந்து எடுத்து செல்லப்பட்டு  கீழ வாண்டான்விடுதி  நம்பிராஜன் குடும்பத்தினரால் சிவனார் என்ற பெயரில் வழிபாட்டிலுள்ள  ஐந்து அடி உயரமுள்ள மகா வீரர்  சிற்பமும்    தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் ஆ.மணிகண்டன் , தலைவர் கரு.ராஜேந்திரன் ,ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் , மரபு நடை ஒருங்கிணைப்பாளர்  கஸ்தூரி ரங்கன் , ஆய்வுக்குழு உறுப்பினர்கள் ம.மு.கண்ணன் , பா.ரமேஷ்குமார்,ஆத்தங்கரைவிடுதி உயர்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்ற பொறுப்பாசிரியர்கள் பழனிசாமி , கண்ணன் ஆகியோரடங்கிய குழுவினரால்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 


புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியின் வரலாற்றை தொகுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம் இது சார்ந்த  களப்பயணத்தின் போது பதிவு செய்யப்படாத வரலாற்று சான்றுகளை தொகுத்து வருகிறோம். இதன் ஒரு பகுதியாக தற்போது பத்தாம் பத்தாம் நூற்றாண்டில் இயங்கிய சமணப்பள்ளி அடையாளம் காணப்பட்டுள்ளது.

அக்னி ஆறும் சமணமும்

அக்கினி ஆறு புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் பெரிய குளத்தில்  தொடங்கி  திருமணஞ்சேரி வரையிலும் அதன் தொடர்ச்சியாக  தஞ்சாவூர் மாவட்டம் இடையாத்தி கொள்ளுக்காடு மற்றும் கீழத்தோட்டம் வழியாக 78 கிலோ மீட்டர் வரை பாய்ந்து வங்கக்கடலில் கலக்கிறது ,


அக்கினி ஆறானது மிகப்பழமையான ஆறாக கருதப்படுகிறது. மேலும் இது  கடந்த காலங்களில் அஞ்ஞான விமோச்சனி என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்திருப்பதும் , அஞ்ஞானத்திற்கு இணையாக வழங்கப்படும் அக்கியானி என்ற சொல் மருவி அக்னி ஆறு என்று பெயராக மாற்றம் பெற்றிருக்கும் என அனுமானிக்க முடிகிறது.
இந்த ஆற்றின் பெயரே சமணக்கொள்கையை தங்கியிருப்பதாக கருத முடிகிறது.  மேலும் இக்கருத்தை உறுதி செய்யும் வகையில்  அக்கினி ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள வாழமங்கலம் , மங்கத்தேவன் பட்டி , மோசகுடி , கோவில் வீரக்குடி , செம்பாட்டூர், புத்தாம்பூர் , உள்ளிட்ட ஊர்களில் சமணத்தீர்த்தங்கரர் சிற்பங்கள் அடையாளங்காணப்பட்டிருப்பதும் தற்போது கீழ வாண்டான் விடுதியிலும் சமணப்பள்ளி அடையாளப்படுத்தபட்டிருப்பதன் மூலம் இந்த ஆற்றங்கரையில் சமணம் பரவி இருந்தது சார்ந்து புதிய வரலாற்று ஆய்வுகளுக்கு வழிவகுக்கும் என நம்பலாம்.
சமணப்பள்ளி அமைவிடம்
கீழ வாண்டான் விடுதி மற்றும் மேல வாண்டான் விடுதி எல்லைப்பகுதியில் அக்கினி ஆற்றின் தென் புறத்தில்  அமைந்துள்ள சிவனார் திடல் என்று அப்பகுதியினரால் அழைக்கப்படும் இடத்தில் சுமார் 97 சென்ட் பரப்பளவில் 200 அடி  நீள அகலத்துடன் செங்கல் கட்டுமான மேடு காணப்படுகிறது. ஒரு இடத்தில் “ ப ” வடிவ அறையின் அடிமானச்சுவரின் மேற்பகுதி 3 அடி 9  அங்குலத்துடன் உள்ளது , கீழ்ப்புறத்தின்  இரண்டு சுவர்களும் 2 அடி  6 அங்குலம் கொண்டவையாக உள்ளன , இந்த அறையின் உட்கூட்டுப்பரப்பளவு 9 அடி  5 அங்குலத்துடன் உள்ளது . புதிதாக அடையாளம் காணப்பட்ட இரண்டு சிற்பங்களும் இவ்விடத்தில் இருந்துள்ளதன் மூலம் இந்த செங்கல் கட்டுமானம் சமணப்பள்ளிதான் என உறுதி செய்ய முடிகிறது.



சமணப்பள்ளி கட்டுமானம் 

17x  16x 3 செ.மீ , 22 x 13.5x 4 செ.மீ, 24x 12x3  செ.மீ   உள்ளிட்ட  அளவுகளைக்கொண்ட  செங்கல் அதிகமாக சிதறி காணப்படுகிறது. இவை கங்கை கொண்ட சோழபுரத்தின் மாளிகை மேட்டில் இருந்த செங்கல் அளவுகளோடு ஏறக்குறைய ஒத்துள்ளது ஆனால்  இப்பகுதியில் சுண்ணாம்பு படிமங்களோ , வேறு எந்த கட்டுமான இணைப்பு கற்காரைகளோ  காண முடியவில்லை எனவே இது பதினொன்றாம் நூற்றாண்டிற்கு முந்தைய  செங்கல் கட்டுமானமாக இருக்கக்கூடும் என அனுமானிக்க முடிகிறது. ஒரு சில இடங்களில் செம்புராங்கல் காணப்படுகிறது இது கட்டுமானத்தின் அடித்தளமாக பயன்படுத்தியிருக்க வாய்ப்புள்ளது. இது முழுக்க செங்கல் மற்றும் களிமண் கொண்ட கட்டுமானமாக இருந்துள்ளதையும், இந்த சமணப்பள்ளி  கற்றளியாக மறு உருவாக்கம் செய்யப்படாமல் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கைவிடப்பட்டுள்ளது என புரிந்து கொள்ள முடிகிறது.


கீழ வாண்டான் விடுதி மகாவீரர்

கீழ வாண்டான்விடுதியில் தற்போது சிவனார் என்ற பெயரில்  வழிபாட்டிலுள்ள சிற்பம் ஐந்து அடி உயரம் மூன்று அடி அகலம் கொண்டதாக உள்ளது.  இது வர்த்தமானர் எனும் சமண சமயத்தின் இருபத்து நான்காவது   தீர்த்தங்கரரான  மகாவீரர் திருமேனி என அடையாளங்காணப்பட்டுள்ளது.

இச்சிற்பம் திகம்பரராக, தியான கோலத்துடன்,  சுருள் முடி தலையுடனும், திறந்த கண்கள், நுனியில் சிறிது சேதமடைந்த மூக்கு , நீண்ட துளையுடைய காதுகள் , புன்முறுவலுடன் கூடிய உதடுகள் ,  விரிந்த மார்புடன்  அமர்ந்த நிலையில் அமைக்கப்பட்டுள்ளது .
 தலையின்  பின்புறமாக முக்காலத்தையும் உணர்த்தும் விதமாக ஒளிவீசும் பிரபா வளையமும்,  மேற்பகுதியில் சந்திராதித்தம் , நித்த விநோதம் , சகல பாசானம் எனும்     முக்குடையும் , பின்புலத்தில்  குங்கிலிய மரமும்  சிற்பத்தின் பக்கவாட்டில் சித்தாக்கியா இயக்கியும், இயக்கன் மாதங்கனும் சாமரத்துடன் இருப்பதாக வடிக்கப்பட்டுள்ளது,    இச்சிற்பம் மகாவீரர் என்பதை  உறுதிப்படுத்தும் அடையாளமான சிங்க முத்திரை கட்டுமானத்தில் மறைந்துள்ளதாக அறிய முடிகிறது .



கீழவாண்டான் விடுதி மிகச்சிறிய தீர்த்தங்கரர் சிற்பம்

அடையாளங்காணப்பட்ட மற்றொரு சமண தீர்த்தங்கரர்  சிற்பம் மிகச்சிறிய அளவில் 17   சென்டிமீட்டர்   உயரம் கொண்டதாகவும் ,  தலை சிதைந்த நிலையில், தாமரை மேல் அமர்ந்த தியான  நிலையிலுள்ளது, எனவே  ஆறாவது தீர்த்தங்கரரான   பத்ம பிரபராக இருக்கலாம் என கருத முடிகிறது. எனினும் சமணப்பள்ளிகளில் மகாவீரர் மற்றும் ஆதிநாதரின் சிற்ப தொகுதிகளே வழிபாட்டிலிருந்துள்ளதாலும், தென் கயிலையில் தாமரை மீது அமர்ந்த நிலையில் ஆதிநாதர்   தவமிருந்ததாக சொல்லப்படும் சான்றுகள் மூலம் முதலாம் தீர்த்தங்கரரான ஆதிநாதர் சிற்பமாகவும் இருக்க வாய்ப்புள்ளது.


சிற்பத்தின் வலப்புறம் அமைந்துள்ள இயக்கியர் சிற்பம் 3 சென்டிமீட்டர் அளவில் மிக நுணுக்கமான முறையில்  மண்டியிட்டவாறு சாமரம் வீசுவதாக  வடிக்கப்பட்டுள்ளது. இடப்புறம் உள்ள இயக்கியரின் சிற்பம்  சிதைந்துள்ளது.


தாமரை மலரின் காம்பிலிருந்து இரண்டு புறமும்  கீழ்ப்புறமாக சுருண்ட கொடி அமைப்புகள் காட்டப்பட்டுள்ளது. இதில்  மண்டியிட்டு கை கூப்பிய நிலையில் தனித்தனியாக நான்கு  மனித உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. 


திருடர்களிடம் தப்பிய சிற்பம்

சிவனார் மேடு என்ற இடத்தில் இருந்த ஐந்தடி உயரமுள்ள தீர்த்தங்கரர் சிற்பம் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே மாட்டு வண்டி மூலம் கடத்திச் சென்றுகொண்டிருந்த  சிலை திருடர்களுக்கு திடீரென்று உடல்நலக்குறைவாலும், மாடுகள் மயக்கமடைந்ததாலும்,உயிர் பயத்தால்  கடத்தி வந்தவர்கள் ,  தீர்த்தங்கரர் சிற்பத்தை ஆத்தங்கரை விடுதி வயல் வெளியில் தூக்கி வீசிவிட்டு சென்றுவிட அதனை ஆத்தங்கரைவிடுதி அம்பலக்காரர் தனது பாதுகாப்பில் வைத்திருந்தாகவும் . இதையறிந்த நம்பிராஜனின் குடும்பத்தினர் தாங்கள் வழிபட்டு வந்த  சாமியை எங்களுக்கு தாருங்கள் என்று கேட்டு பெற்று வந்து அதனை சிறு கோயிலாக எழுப்பி வழிபட்டு வருவதாகவும் வழிபட்டு வருபவர்கள் கூறுகின்றனர், இது போன்ற நம்பிக்கை கதைகளே பல சிற்பங்களுக்கு காவலாக இருந்து வருகிறது .




  

Sunday, November 4, 2018

இந்திய அரசின் கலை மற்றும் பண்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் புதுக்கோட்டை ஆசிரியர்களுக்கு கொடும்பாளூர் முதுகுன்ற முடையார் கோவிலில் நடந்த பயிற்சியில் இரண்டு துண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு


இந்திய அரசின் கலை மற்றும் பண்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் புதுக்கோட்டை மாவட்ட  ஆசிரியர்களுக்கு மூன்று நாள் கலை மற்றும் பண்பாட்டு பயிற்சி புதுக்கோட்டை வட்டார வள மையத்தில் மாவட்டக்கருத்தாளர் சந்திர சேகரன் ஒருங்கிணைப்பில் நடந்தது.

 இரண்டாம் நாள் பயிற்சிக்கு சிறப்பு கருத்தாளர்களாக புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகத்தலைவர்  கரு.ராஜேந்திரன் , நிறுவனர் ஆ.மணிகண்டன் பங்கேற்று  கொடும்பாளூர் மூவர் கோவில், ஐவர் கோவில் ,இதில்  முதுகுன்ற முடையார் கோவில் ஆகிய இடங்களின் வரலாற்று பின்னணிகள பகிர்ந்துகொண்டனர்.

முதுகுன்ற முடையார் கோவிலில் நடந்த பயிற்சியின்போது எதிர்பாராத விதமாக மறைந்து கிடந்த இரண்டு துண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க மூவர் கோவில் பூதி விக்கிரம கேசரியாலும், முது குன்ற முடையார்ப் என கல்வெட்டுகளில் உள்ள முசுகுந்தேஸ்வரர் கோவில் மகிமாலைய இருக்கு வேள் என்பவரால் முதலாம் பராந்தகன் காலத்தில் கட்டப்பட்டது, அது மட்டுமின்றி மணிக்கிராமம் எனும் வணிகக்குழுவின் தலைநகராக விளங்கிய கொடும்பாளூர் வரலாற்று சிறப்புமிக்க ஊராகும், இவ்வூரில் பல நூற்றுக்கணக்கான வரலாற்று சான்றுகள இன்னும் அறியப்படாமலேயே உள்ளன, அவற்றின் ஒரு பகுதியாக  இரண்டு கல்வெட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதில் மங்கல வரியுடன் “கோப்பரகேசரி பந்மரான சக்கரவத்திகள் குலோத்துங்க சோழ தேவற்குயாண்டு 17 ஆவது (இரட்டைபாடி கொண்ட சோழ வள நாட்டு” என்று குலோத்துங்க சோழரின் பதினேழாவது ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்ட முற்று பெறாத துண்டு கல்வெட்டும், கொற்றக்குடைப்பன்மமை முந்நூற்றுவரும் பக்கல் ...வலப்பாடி நிலத்துள் கரைக்கிழச்செய்யும் வே(லை)  என்று பொறிக்கப்பட்ட வணிகக்குழுவின் கல்வெட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளது.





Tuesday, October 2, 2018

A rare Thisaiyaarathu Ainootruvar inscription stone pillar (Rajendra chola Valangai ) of 11th century BC is found near Sellukudi, Pudukkottai District, Tamil Nadu.


A rare Thisaiyaarathu Ainootruvar  inscription stone pillar (Rajendra chola Valangai ) of 11th century BC is found near Sellukudi, Pudukkottai District, Tamil Nadu.

The members of the Heritage Club of Government High School Ellaippatti, in one of their field visits the group of pupils were looking for stone inscriptions in their village.

Poovarasan a member of the club has stumbled upon a rock with inscriptions. Their coordinator Kasthuri Rengan immediately informed the founder of Pudukkottai Archeological Research Forum, Manganoor A. Manikakandan. He along with the President Karu.Rajendran and members Muthukkumar, Kannan visited the field and found out the stone inscription belonged to 11th century.

It sung the praise of the  great itinerant trade associations merchant group called Thisaiyaarathu Ainootruvar. Manikandan and Karu Rajendran says that it is one the rarest find, it belongs to 11th century BC. In those days the merchants were treated parallel to kings. They enjoyed royal rights and had vast business area covering the entire East Asia. These merchants had a strong influence over the East Asian region. They had amicable relationship with most of the East Asian Kings. This kind of relationships made the merchants to serve as ambassadors between kindoms. Time of this new found pillar The new found stone pillar was bit ruined in some parts so there is no mention of the time, but the style of the scripture and praise of the merchant group confirms that it belongs to 11th century BC. It also mentions Rajendrachola the first, so it is considered to be inscribed on 11th century. The Size and Shape of the inscribed pillar.

 The stone pillar is 5 feet tall, and all the four sides and the top has inscriptions. At the top of the pillar an image of a scepter, an eagle, an arival(a weapon as well as tool), a concha and lamps are carved. The wordings “pazhiyali kallidaikkodi thalai” is inscribed. This is considered to be the honorary title given to Rajendra Chola the first himself. The inscription begins with “smastha buvanatha” and followed by seven lines of invocation to God. In the following lines the group of merchants introduce themselves as people of Goddess Shri Maheswari of Ayyappozhil. The next lines speaks of 18 heavily guarded port cities with moon reaching palaces and great roads, and 32 commercially important towns, and sixty four heavily guarded market places with ware houses. This indeed gives a spectacular past of the Tamil Marchant Groups, and their top notch organized operation and their influence over the rulers and people.

The Key members of the Group Further the inscription tells us about the members and their communal background, by the words Chetti Seerputhiran, Kavarai(Merchants), “kaasiyavan vidutha kaamunda suvami” (Landlord), “uruthiranthu vidutha olai vaaranu” (Accountants!) “seeriya sendvanum” made the group. The richness of the landscape also depicted in the inscription. Trees of Jack Fruit, Mango, Banana, along with betel tree, climbers like Mullai, infested with birds like cuckoos and parrots. The birds were merry without any pain, and in this wonderful land the Merchant Group held the scepter and ruled. The inscription also states about the security guards and generals of the merchant group. Their titles mentioned in the pillar are “eighteen flagger Lion (“pathinen kodi pasha veera singan”), Skirted Soldier, (“paavadai Veeran”) and Front Liner (“Kadipurathu Munai Veerar’). Among the above titles the title Lion is unique, as it is a very rare title in these kinds of merchant inscriptions. The forth side of the inscription was very damaged due to lack of awareness. For a very long time the pillar was used as a farm boundary stone, that too in horizontally.

This position made the stone an attraction for the local cattle and the rubbed out the fourth side. It was sheer luck that the other there sides survived the test of time. There is a mention of Valangai Vallabars, a high command of this group had donated something to Sellukudi.

The name of the village is very clearly mentioned in the inscription. It is once called Selvikudi. The Merchant Group consist of people from all walks of life, it is organizational structure is awe inspiring as it consists of Merchants, Land Lords, Accountants, Guards, Soldiers, port cities, merchant towns, market places, and ware house with proper guards. This group shared its wealth for the public welfare and common good. In the ancient past there were several East Asian Merchant groups, but this Tamil Merchant Group is regarded as the best by Historians. They enjoyed privileges among kings of the Ancient Tamil, as well as with the East Asian Kings opined researchers Manikandan and Karu Rajendran.

Links
1. map







திசை விளங்கு திசையாயிரத்து ஐஞ்ஞூற்றுவர் கல்வெட்டு - புதுக்கோட்டை அருகே கண்டுபிடிப்பு



புதுக்கோட்டை மாவட்டம்  அன்னவாசல் வட்டம் செல்லுகுடியில் பழமையான ஒரு கல்வெட்டு இருப்பதாக எல்லைப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் எஸ்.பூவரசன் அளித்த தகவலைத்தொடர்ந்து பள்ளியின்  தொன்மை பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் எஸ்.கஸ்தூரிரங்கன் அளித்த தகவலின் பேரில் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் மங்கனூர் ஆ.மணிகண்டன், தலைவர் மேலப்பனையூர்  கரு.ராஜேந்திரன், ஒருங்கிணைப்பாளர் மு.முத்துக்குமார், உறுப்பினர் ம.மு. கண்ணன் ஆகியோர் அக்கல்வெட்டை படித்தனர். இது கி.பி.11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மெய்க்கீர்த்தியுடன் கூடிய  திசைவிளங்கு திசையாயிரத்து ஐஞ்ஞூற்றுவர் வணிகக்குழுவின் கல்வெட்டு என கண்டறியப்பட்டது.



மன்னருக்கு இணையாக வணிகர்கள் 

இதுவரை தென்னிந்திய வணிகர் குழுக்களின் கல்வெட்டுகள் தமிழகத்தில் 118 ,கர்நாடகாவில்  132 ,ஆந்திராவில்  35, மகராஷ்டிராவில் 2 கேரளத்தில்  8 எண்ணிக்கையிலும், தென் கிழக்கு ஆசிய நாடுகளான இந்தோனேசியா (சுமத்ரா), தாய்லாந்து, மியான்மர் ஆகியவற்றில் நான்கும், இலங்கையில் 15 எண்ணிக்கையிலும் என  இதுவரை 314 வணிகக்குழுக்களின்  கல்வெட்டுகள்  அடையாளம் காணப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுகளில் மன்னருக்கு இணையான உரிமைகளுடன் மதிப்புமிக்கவர்களாக வணிகர்களும், அவர்தம் பதினெண் கொடி வீரகொடியாரும் கருதப்பட்டனர். குறிப்பாக சோழர்களின் காலத்தில் இத்தகைய வணிகர்கள் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மிகுந்த ஆதிக்கம் செலுத்தி வந்ததோடு அந்நாட்டிலுள்ள மன்னர்களோடு இணக்கமான உறவுகளைக் கொண்டிருந்தனர். எனவே, பெரும்பாலும் அருகாமை நாடுகளுக்கு தூதுவர்களாக வணிகக்குழுவை சேர்ந்தவர்களையே அனுப்பி வைக்கப்பட்டிருப்பதையும் வரலாற்று சான்றுகள் மூலம் அறிய முடிகிறது. 




கல்வெட்டின் காலம்
புதுக்கோட்டை மாவட்டம் செல்லுகுடியில் கிடைத்த கல்வெட்டு, மன்னர்களுக்கு இணையாக திசைஆயிரத்து ஐந்நூற்றுவர் என்னும் வணிகக்குழுவின் மெய்க்கீர்த்தியுடன் உள்ளது. இதில் காலம் குறிப்பிடப்படவில்லை. எனினும் முதலாம் இராசேந்திரன் சோழன் பெயர் உள்ளதாலும், எழுத்தமைதி மற்றும் மெய்கீர்த்தியின் அடிப்படையிலும் இக்கல்வெட்டு கி.பி.11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பது உறுதியாகிறது. 

செல்லுகுடி வணிகக்கல்வெட்டு 
ஐந்து அடி உயரமுள்ள ஒரு கல்லின் நான்கு பக்கமும் எழுதப்பட்டுள்ளன. இக்கல்வெட்டில் 83 வரிகளுள்ளன. இதன் உச்சியில் சங்கு, செங்கோல், அரிவாள், குத்துவிளக்குகள் ஆகியவை கோட்டுருவமாக வரையப்பட்டு பழியலி கள்ளிடைக்கொடி தலைஎன எழுதப்பட்டுள்ளது. இதை இராஜேந்திர சோழன் வலங்கை தலைமையின் சிறப்புப் பெயராகக் கருதலாம்.

ஸமஸ்த புவநாதஎனத் தொடங்கும் இக்கல்வெட்டில் 7 மங்கள வரிகளில் ஸ்ரீ வாசு தேவர், கண்டழி,மூலபத்திரர் போன்றவர்களின் வழி வந்த ஐயபொழில்புர ஸ்ரீபரமேஸ்வரிக்கு மக்கள் என தம்மை அடையாளப்படுத்திக்கொள்கிறார்கள்.
பின்பு, நிலாவைதொடும் அளவிலான மாட வீதிகளைக்கொண்ட 18 பட்டணமும் (துறைமுக நகரங்கள்), 32 வேளாபுரமும் (இரண்டாம் நிலை வணிக நிறுவனங்கள் அடங்கிய பாதுகாப்பான நகரங்கள்), காவல் வசதியுடன் வணிகர்களுக்கு பொருட்களை சேமித்து வைப்பதற்கான கிட்டங்கிகளுடன் கூடிய 64 கடிகைத்தாவளமும் இருந்ததாகவும் அவ்வணிகக்குழு பற்றிய பெருமைகள் கூறப்படுகின்றன.




குழுவின் முக்கிய அங்கத்தினர்
இக்குழுவில் பலதை(வீரர்) பதினெண் கொடி வீரகொடிகொடியார், செட்டி சீர்புத்திரன்(வீரர்), கவறை (வணிகர்), காசி யவன் விடுத்த காமுண்ட சுவாமி (நிலக்கிழார்), உருத்திரந் விடுத்த ஓலை வாரியன் (கணக்கு எழுதுபவர்),சீரிய செண்டாவனும்(சிறு பணி செய்பவர்) இருந்தனர் என பொறிக்கப்பட்டுள்ளது 


ஐநூற்றுவரின் வளம் 
பலா மரங்களும்மாமரங்களும்வாழையும்பாக்கு மரங்களும்முல்லை மலர் கொடிகளும்குயிலும்கிளியும் குழுமியிருப்பதாகவும்துன்பங்கள் ஏதுமின்றிஒன்றாக கூடிஅவை மகிழ்வுடன், துன்பங்கள் ஏதுமின்றி  இருந்ததையும் அங்கே ஐந்நூற்றுவர் செங்கோலை முன்னிறுத்தி  நேர்மையுடன்,  ஆயிரம்  திசைகளிலும், செழிப்புற ஐஞ்ஞூற்றுவர் வணிக  நிர்வாகம் செய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது .


கல்வெட்டிலுள்ள வீரர்கள் 

பாதுகாப்பு பணியிலும்குழுவின் மிக உயர்ந்த பொறுப்பிலும் இருந்த பதினெண் கொடியார்பழ வீரசிங்கன்வலங்கை பாவாடை வீரன், கடிபுரத்து முனைவீரர் பற்றியும் கல்வெட்டு கூறுகிறது. சிங்கன் என்ற பெயர் அரிதாகவே வணிக கல்வெட்டுகளில் காணப்படுவதால் இக்கல்வெட்டு முக்கியத்துவம் பெறுகிறது. 

இராசேந்திர சோழ  வலங்கை வல்லபர் :
முதலாம் இராஜ ராஜன் காலத்திலேயே வலங்கை , இடங்கை அமைப்புகள் இருந்ததற்கான சாற்றுகள் கிடைத்துள்ளன, வலங்கை பிரிவில் மேம்பட்ட சமூக பிரிவுகளைச் சேர்ந்த வீரர்கள் , தொழில் புரியும் வர்க்கத்தினரும், இடங்கைப்பிரிவில் சிறு தொழில் செய்யும் குடியினரும் இருந்துள்ளதை சான்றுகள் மூலம் அறிய முடிகிறது. வலங்கை வல்லபர் என்ற குழுத்தலைவரே தம்மை இராசேந்திர சோழர் வலங்கை என்று அடையாளப்படுத்திக்கொள்வதோடு தனது தனி அடையாளமாக பதிநெண்கொடி வீரகொடி வலங்கை  அழைத்துக்கொண்டு இக்கல்வெட்டை பொறித்துள்ளார் . இதன்  மூலம் வலங்கை பிரிவில் முக்கியத்துவமிக்க ஒரு நிர்வாகியாக இருந்திருப்பார் என கருதமுடிகிறது.
கல்வெட்டின் நான்காவது பக்கம் சிதைந்த நிலையில் உள்ளபோதிலும்  இறுதி வரிகள் தெளிவாக உள்ளன, இதில்  குழுவினர் செல்லுக்குடிக்கு வழங்கிய கொடை பற்றிய செய்தியானது  “குடுத்தோம் பதினெண் கொடி வீரகொடி  வலங்கை வல்லபர்  செல்விகுடிக்கு” என  நிறைவு செய்யப்பட்டுள்ளதன் மூலம் இவ்வூருக்கு நற்பணி செய்வதற்கான சாசன கல்வெட்டாக இதனைக்கருதலாம்.
 
கூட்டுறவுவணிகம் 
பாதுகாப்பு வீரர்களும், வணிகர்களும், கைவினைஞர்களும், சிறு தொழில் செய்வோரும், நிலக்கிழார்களும் இணைந்து உருவாக்கிய இந்த கூட்டுறவு வணிகம் நம்பகத்தன்மை உடையதாகவும், பொருள் விற்று லாபத்தின் ஒரு பகுதியை பொதுகாரியங்களுக்கு செலவிட்டிருப்பதையும், பின் வருங்காலங்களில் நிலம் உள்ளட்டவைகளின் வருவாயின் குறிப்பிட்ட பகுதியை நலத்திட்டங்களுக்கு வழங்கியிருப்பதையும் கல்வெட்டுகள் மூலம் மக்களுக்கு அறிவித்துள்ளதையும் அறிய முடிகிறது. பண்டைய உலக வரலாற்றில் கூட்டுறவு வணிகத்தினை பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வணிகர்கள் மேற்கொண்ட போதும், தெற்காசியாவை பொறுத்தவரையில் தென்னிந்திய வணிகர்களான ஐந்நூற்றுவரே தனக்கான முறையான நிர்வாக கட்டமைப்புகளுடனும், நிதி வருவாயை தமக்குள் முறையாக பகிர்ந்து கொள்வது குறித்த வரையறை கொண்டிருந்ததோடு, சூழலுக்கு ஏற்றவாறு மன்னர்களுடன் உறவை ஏற்படுத்தி செயல்படும் அரசியல் நுட்பங்கள் நிறைந்தவர்களாகவும் இருந்துள்ளனர். என்றார் .

                                  நன்றி
  இக்கல்வெட்டை ஆய்வு செய்ய உறுதுணையாக செல்லுகுடி பெரியவர் வீராசாமி , முன்னாள் மாணவர்  ரகுபதி , பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்ற மாணவர்கள் சஞ்சய் , நிகல்யா , ரம்யா , சிவக்குமார்  ஆகியோரும் செயற்பட்டதாக நன்றி தெரிவித்துக்கொண்டார்.
இணையத்தொடர்புகள்

Saturday, July 14, 2018

Sunday, April 15, 2018

சோழ, பாண்டிய மன்னர்களால் பராமரிக்கப்பட்ட நெருஞ்சிக்குடி உதய மார்த்தாண்ட ஈஸ்வரர் கோவிலில் உழவாரப்பணியை மேற்கொண்ட வீரசோழன் அணுக்கன் படை குழுவினருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது .

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டம் நெருஞ்சிக்குடியில் உதய மார்த்தாண்ட ஈஸ்வரர் கோவில் உள்ளது. சோழ, பாண்டிய மன்னர்களால் பராமரிக்கப்பட்ட இக்கோவிலில் அவ்வப்போது வழிபாடு நடைபெற்று  வந்தாலும், முழுமையான பராமரிப்பின்றி கோவிலின் கருவறை கோபுரம், மண்டபம்  உள்ளிட்ட பகுதிகளில் விழுதுகளுடன் கூடிய ஆலமரம் உள்ளிட்ட மரங்கள் வளர்ந்திருந்ததோடு, கோவிலின் சுற்றுச்சுவர் உள்ளிட்டவை முழுமையாக புதர் மண்டிக்காணப்பட்டது.
இதனை உழவாரப்பணி மூலம் அகற்றிய வீர சோழன் அணுக்கன் படைக்கு எமது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் 






தொல்லியல் கழகத்தின் 30, 31 ஆவது சர்வதேச கருத்தரங்கம் மற்றும் ஆவணம் ஆய்விதழ் வெளியீட்டு விழா ( புதுக்கோட்டை)

மாண்புமிகு தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, மாவட்ட ஆட்சியர் திருமதி. கவிதாராமு , புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு . வை....