Sunday, September 5, 2021
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகில் உள்ள கண்ணனூரில் உள்ள ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமை வாய்ந்த பெருங்கற்கால பண்பாட்டுச் சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகம் அரசுக்குக் கோரிக்கை
தமிழக வரலாற்றில் களப்பிரர் காலத்தைச் சேர்ந்த பூலாங்குறிச்சி கல்வெட்டுகளை தொல்லியல் சின்னமாக அறிவித்த தமிழ்நாடு அரசிற்கு நன்றி
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ளது பூலாங்குறிச்சி. இங்குள்ள குன்றின் சரிவில் உள்ள பாறையில் களப்பிரர் காலத்தைச் சேர்ந்த 3 புதிய கல்வெட்டுகளை 1979-ல் ஆய்வாளரான மேலப்பனையூர் ஆசிரியர் கரு.ராஜேந்திரன் கண்டுபிடித்தார். இயற்கையிலேயே உரிந்து சிதையும் தன்மை கொண்ட பாறையில் அதைச் செதுக்கி சமப்படுத்தாமலே கல்வெட்டை பொறித்துள்ளார்கள். இதனால் மழை, வெயில் போன்றவற்றால் கல்வெட்டு தொடர்ந்து அழிந்து வந்த நிலையில் கல்வெட்டைக் கண்டுபிடித்த கல்வெட்டு ஆய்வாளர் கரு.ராஜேந்திரன், புதுக்கோட்டை தொல்லியல் கழகத்தின் நிறுவனர் மங்கனூர் ஆ.மணிகண்டன் ஆகியோர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அந்நாளைய திருச்சுழி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவரும் தற்போதைய தொல்லியல் துறை அமைச்சர் தங்கம்.தென்னரசு அவர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தோம் , தற்போது புதிய அரசு பொறுப்பேற்றவுடன் முதல் கூட்டத்தொடரிலேயே பாதுக்கக்கப்பட்ட சின்னமாக அறிவித்திருப்பது பெரு மகிழ்ச்சியளிக்கிறது.
கல்வெட்டின் சிறப்பு
தமிழி
எழுத்து வட்டெழுத்தாக மாறி வரும் இக்கல்வெட்டில் சில எழுத்துகள் தமிழியாகவும், சில எழுத்துகள் வட்டெழுத்தாகவும் உள்ளன. இக்கல்வெட்டுகளின்
காலம் கி.பி.5-ம் நூற்றாண்டு. இதிலுள்ள ஒரு கல்வெட்டு
சேந்தன் கூற்றன் என்ற மன்னனின் ஆட்சிக்காலத்தில் வேள் மருகண் மகனும் கடலகப் பெரும்
படைத்தலைவன் என்ற பட்டத்தைப் பெற்றவனுமான எங்குமான் என்பவன், பச்செறிச்சில் மலை (பூலாங்குறிச்சி), திருவாடானை அருகே விளமர் ஆகிய ஊர்களில் தேவகுலத்தையும், மதுரை உலவியத்தான் குளம் அருகே தாபதப்பள்ளியைச் சேர்ந்த
வாசிதேவனார் கோட்டத்தையும் அமைத்ததாகக் கூறுகிறது. இவற்றிற்கு வேண்டியதைச்
செய்வதாக அத்திகோயத்தார், உள்மனையார், நான்கு வகைத் திணைகள் ஆகிய மூன்று பிரிவினர்
ஏற்றுக்கொண்டுள்ளனர்.
தற்போது தமிழ்நாடு தொல்லியல் துறை பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னமாக அறிவித்திருப்பதற்கு ஒட்டு மொத்த தொல்லியல் ஆய்வாளர்கள் ஆர்வலர்கள் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் .
நன்றியுடன்
புதுக்கோட்டை
தொல்லியல் ஆய்வுக்கழகம்
ஆயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முன்பு நீர் பாசன பெருமடைக்கால் அமைத்துக்கொடுத்த பொற்கொல்லர் புதுக்கோட்டை மேலூர் கண்மாயில் கல்வெட்டு கண்டுபிடிப்பு
புதுக்கோட்டை மாவட்டம்
குளத்தூர் தாலுக்கா சத்தியமங்கலம் அருகேயுள்ள மேலூர் பாசன கண்மாயில்
குமிழிக்காலில் எழுத்துப் பொறிப்பு இருப்பதாக கீரனூர் சேர்ந்த வேளாண் பொறியாளர் என்.நாராயணமூர்த்தி
கொடுத்த தகவலையடுத்து, புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிறுவனரும், தஞ்சாவூர்
தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொல்லறிவியல் துறை ஆய்வாளருமான மங்கனூர் ஆ.மணிகண்டன்
கல்வெட்டை படியெடுத்து வாசித்துள்ளார். இதில் தட்டான் திறமன் என்பவர்
நீர்ப்பாசனக்கண்மாய்க்கு பெருமடைக்கால் அமைத்துக்கொடுத்த தகவல்
பொறிக்கப்பட்டுள்ளதாகவும் இக்கல்வெட்டு ஆயிரமாண்டுகளுக்கு முற்பட்டது எனவும்
தெரிவித்துள்ளார்.
பல்வேறு மாவட்டங்களில் நீர்ப்பாசன அமைப்புகள் பற்றிய கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் அதிகமான குமிழிக்கல்வெட்டுகள் புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம்,திருச்சிராப்பள்ளி பகுதிகளைச் சேர்ந்தவையாக உள்ளன.
இத்தகைய கல்வெட்டுகள் பழங்கால
பாசனமுறையில் தமிழர்கள் கொண்டிருந்த நீர்ப்பாசன மேலாண்மை நுட்பத்தையும், நீர்ப்பங்கீட்டில்
பின்பற்றப்பட்ட சமூக நடைமுறைகளை வெளிப்படுத்துபவையாக
உள்ளன.
குமிழிக்கல்வெட்டுகள்
பழங்கால அறிவியல் , எண்கணிதம், வானியல்
நகர்வுகள் அடிப்படையில் நன்கு தேர்ந்த கட்டுமான அறிவை பெற்றவர்களாகவும்
இருந்துள்ளனர். செப்பு ,
இரும்பு , தங்கம், மரம்
, கல்
என ஐந்து தொழில்நுட்பத்திலும் திறம்பட இயங்கிய கன்னார் , கொல்லர், தட்டார், தச்சர், கற்தச்சர் என ஐந்தொழிலை அடிப்படையாக கொண்டவர்களாக சங்க.
இலக்கியங்களிலும் பழங்கால சான்றுகள் மூலமும் அறிந்து கொள்ள முடிகிறது.
பழங்கால உலோக அறிவியலில்
கோலோச்சிய கம்மாளர் இனத்தவருள் ஒரு பிரிவினரான. பொற்கொல்லர்கள் கல்வெட்டுகளில் தட்டான்
என்று அழைக்கப்படுகின்றனர்.
மேலும் தட்டார்களுக்கென தட்டிறை, தட்டோலை, தட்டார்
பாட்டம் உள்ளிட்ட வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. உருக்குலைகளுக்கு வரி விதிப்பு செய்த
தகவலை புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அரங்குளநாதர் கோவில் கல்வெட்டு தெரிவிக்கிறது.
சிறு வாயில் நாட்டு மேலூர்
தட்டான் திறமன் என்பவர் இறைவனின் எண்ணப்படி (திரு உளப்படிக்கு) பெருமடைக்கால்
நட்டுவித்தாக செய்தி பொறிக்கப்பட்டுள்ளது.
இப்புதிய கல்வெட்டு பராந்தகன் காலத்தைய எழுத்தமைதியோடு
காணப்படுவதால் ஒன்பதாம் நூற்றாண்டைச்சேர்ந்ததாக கணிக்கலாம். இந்தக்கல்வெட்டின்
மூலமாக பொதுமக்களும் தொழில் புரிவோரும் அனைத்திற்கும் அடிப்படையாக இருக்கும்
பயிர்த்தொழிலையும் அதற்கு தேவையான பாசன ஏற்பாடுகளையும் இறைத்தொண்டாக நினைத்து
செயற்படுத்தியதை இக்கல்வெட்டின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.
தமிழகத்தில் சோழ, பாண்டியர், வணிக குழுக்கள், உள்ளூர் நிர்வாக அமைப்புகள், உள்ளிட்டோருடன் பொதுப்பணியில் நாட்டமுடைய செல்வந்தர்களும், நீர்நிலைகளை பாதுகாப்பதிலும் புதிய குளங்களை அமைப்பதிலும் பாசன கட்டமைப்புகளை ஏற்படுத்துவதிலும் சீரமைப்பதிலும் பெரும்பங்காற்றி இருக்கின்றனர் என்பதற்கான சான்றாக இக்கல்வெட்டு திகழும் என்றார்.
மேலும் இக்கல்வெட்டு வாசிப்பை உறுதி செய்த
மூத்த கல்வெட்டறிஞர் முனைவர் சு.ராஜகோபால் , படியெடுக்கும் போது உதவி புரிந்த முருக பிரசாத் ,ராகுல்
பிரசாத், தொல்லியல் ஆய்வுக்கழகத்தின் உறுப்பினர் பீர்முகமது ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.
Wednesday, May 22, 2019
பொற்பனைக்கோட்டை –ஓர் சங்க கால கோட்டை
Tuesday, October 2, 2018
திசை விளங்கு திசையாயிரத்து ஐஞ்ஞூற்றுவர் கல்வெட்டு - புதுக்கோட்டை அருகே கண்டுபிடிப்பு
இதுவரை தென்னிந்திய வணிகர் குழுக்களின் கல்வெட்டுகள் தமிழகத்தில் 118 ,கர்நாடகாவில் 132 ,ஆந்திராவில் 35, மகராஷ்டிராவில் 2 கேரளத்தில் 8 எண்ணிக்கையிலும், தென் கிழக்கு ஆசிய நாடுகளான இந்தோனேசியா (சுமத்ரா), தாய்லாந்து, மியான்மர் ஆகியவற்றில் நான்கும், இலங்கையில் 15 எண்ணிக்கையிலும் என இதுவரை 314 வணிகக்குழுக்களின் கல்வெட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுகளில் மன்னருக்கு இணையான உரிமைகளுடன் மதிப்புமிக்கவர்களாக வணிகர்களும், அவர்தம் பதினெண் கொடி வீரகொடியாரும் கருதப்பட்டனர். குறிப்பாக சோழர்களின் காலத்தில் இத்தகைய வணிகர்கள் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மிகுந்த ஆதிக்கம் செலுத்தி வந்ததோடு அந்நாட்டிலுள்ள மன்னர்களோடு இணக்கமான உறவுகளைக் கொண்டிருந்தனர். எனவே, பெரும்பாலும் அருகாமை நாடுகளுக்கு தூதுவர்களாக வணிகக்குழுவை சேர்ந்தவர்களையே அனுப்பி வைக்கப்பட்டிருப்பதையும் வரலாற்று சான்றுகள் மூலம் அறிய முடிகிறது.
செல்லுகுடி வணிகக்கல்வெட்டு
‘ஸமஸ்த புவநாத’ எனத் தொடங்கும் இக்கல்வெட்டில் 7 மங்கள வரிகளில் ஸ்ரீ வாசு தேவர், கண்டழி,மூலபத்திரர் போன்றவர்களின் வழி வந்த ஐயபொழில்புர ஸ்ரீபரமேஸ்வரிக்கு மக்கள் என தம்மை அடையாளப்படுத்திக்கொள்கிறார்கள்.
பின்பு, நிலாவைதொடும் அளவிலான மாட வீதிகளைக்கொண்ட 18 பட்டணமும் (துறைமுக நகரங்கள்), 32 வேளாபுரமும் (இரண்டாம் நிலை வணிக நிறுவனங்கள் அடங்கிய பாதுகாப்பான நகரங்கள்), காவல் வசதியுடன் வணிகர்களுக்கு பொருட்களை சேமித்து வைப்பதற்கான கிட்டங்கிகளுடன் கூடிய 64 கடிகைத்தாவளமும் இருந்ததாகவும் அவ்வணிகக்குழு பற்றிய பெருமைகள் கூறப்படுகின்றன.
பாதுகாப்பு பணியிலும், குழுவின் மிக உயர்ந்த பொறுப்பிலும் இருந்த பதினெண் கொடியார், பழ வீரசிங்கன், வலங்கை பாவாடை வீரன், கடிபுரத்து முனைவீரர் பற்றியும் கல்வெட்டு கூறுகிறது. சிங்கன் என்ற பெயர் அரிதாகவே வணிக கல்வெட்டுகளில் காணப்படுவதால் இக்கல்வெட்டு முக்கியத்துவம் பெறுகிறது.

கூட்டுறவுவணிகம்
4.http://www.dinakaran.com
5.https://theekkathir.in
6.https://timesofindia.indiatimes.com
7.https://www.dtnext.in
8.https://www.deccanchronicle.com/nation/current-affairs
தலையில்லா புத்தர் சிலை - ஆவுடையார்கோவிலில் கண்டுபிடிப்பு - புத்த சமய வரலாற்றில் புதிய வெளிச்சம்
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் பெரிய கண்மாய் , பெருமடை வாய்க்கால் மேட்டில் தலையில்லா புத்தர் சிலையை , புதுக்க...
-
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் வேப்பங்குடி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைத்துள்ளது பொற்பனைக்கோட்டை புதுக்கோட்டை மத்திய பேருந்து நி...
-
A rare Thisaiyaarathu Ainootruvar inscription stone pillar (Rajendra chola Valangai ) of 11th century BC is found near Sellukudi, Puduk...
-
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஆத்தங்கரைவிடுதி ஊராட்சி கீழ வாண்டான் விடுதி கிராம எல்லைக்குட்பட்ட சிவனார் மேடு என்ற இடத்தில் சுமார் 9...