Saturday, November 19, 2016

புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகம் மற்றும் ராமநாதபுரம் தொல்லியல் மற்றும் வரலாற்று பாதுகாப்பு மையம் இணைந்து உலக மரபு வார விழாவை நார்த்தாமலையில் கொண்டாடியது

உலகின் பல்வேறு இடங்களிலும் உலக மரபு வாரம் நவம்பர் 19  முதல் நவம்பர்  25  வரை  பண்பாடு மற்றும் மரபுகளின் மீது ஈடுபாடு கொண்டவர்களால் கொண்டாடப்படுகிறது. 












இந்நிகழ்வு  புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகம் மற்றும் ராமநாதபுரம் தொல்லியல் மற்றும் வரலாற்று பாதுகாப்பு மையம் இணைந்து இவ்விழாவை  நார்த்தாமலை கடம்பர் கோவில் அருகே கொண்டாடியது. இந்நிகழ்விற்கு புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக தலைவர் மேலைப்பனையூர் ராஜேந்திரன் தலைமை வகித்தார் .புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் மங்கனூர் மணிகண்டன், ராமநாதபுரம் தொல்லியல் மற்றும் வரலாற்று பாதுகாப்பு மைய நிறுவனத்தலைவர் வெ.ராஜகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக உறுப்பினர் மு.முத்துக்குமார் அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்வில் கந்தர்வகோட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் , மருதாந்தலை அரசு மேல்நிலைப்பள்ளியைச்சேர்ந்த மாணவ மாணவிகள் , ராமநாதபுரம் திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.


இந்தியப்பண்பாடு மற்றும் கலாச்சார ஒற்றுமையை இளந்தலைமுறைக்கு எடுத்துக்கூறும் வகையில் புதுக்கோட்டை , ராமநாதபுரம் மாவட்ட தொல்லியல் ஆர்வலர்களின் கூட்டுமுயற்சியோடு இந்நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது. இதில்  மாணவர்களுக்கு தமிழர் வரலாறு, தொழிநுட்பம், நீர்பாசன முறைகள், கலை மற்றும் வழிபாடு உள்ளிட்டவை குறித்து விளக்கமளித்து உரையாற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து நார்த்தாமலை விசையாலய சோழீஸ்வரத்தில் கல்வெட்டு படியெடுப்பது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. இப்பயிற்சியை மூத்த கல்வெட்டு ஆய்வாளர் கரு.ராஜேந்திரன் வழங்கினார். இறுதியாக  மருதாந்தலை அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மஸ்தான் பகுருதீன் நன்றி கூறினார்.





No comments:

Post a Comment

தொல்லியல் கழகத்தின் 30, 31 ஆவது சர்வதேச கருத்தரங்கம் மற்றும் ஆவணம் ஆய்விதழ் வெளியீட்டு விழா ( புதுக்கோட்டை)

மாண்புமிகு தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, மாவட்ட ஆட்சியர் திருமதி. கவிதாராமு , புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு . வை....